ஆஸ்ரமம் ஆரம்பிச்சு கிட்டத்தட்ட பத்து வருஷம் மேல ஆகுது. அவரு சொல்றதுன்னு உண்மைனா இவ்ளோ நாள் ஏன் வரல? எனக்கு என்னமோ இது பிராடு வேலை மாதிரி தெரியுது. கொஞ்சம் கவனமா ஹாண்டில் பண்ணனும்... இதுக்கெல்லாம் பதில் கிடைச்சதும் ஒரு நல்ல வக்கீல் மூலமா அடுத்து என்ன பண்ணலாம்னு பாக்கலாம்." சத்யா சொல்வதை கேட்ட பவித்ராவுக்கு முகமெல்லாம் வெளிறி போனது பயத்தில்.
"அவரை எங்க போயி பாக்கறது? யாருனே தெரியாதே..."அந்த நோட்டீசை பார்த்தபடி மிரட்சியோடு கூறினாள் பவித்ரா.
"அந்த ரெஜிஸ்டர் போஸ்ட்லயே அட்ரஸ் இருக்கும். போயி பார்த்தா யாருனு தெரிஞ்சுடும். எனக்கு மட்டும் அவரை முன்ன பின்ன தெரியுமா என்ன? " சத்யாவிடம் இருந்து வந்த பதிலில் வாயை மூடிக்கொண்டாள் பவித்ரா.
அதன் பின் சத்யாவும் ஏதோ ஒரு யோசனையில் மூழ்கிப்போக பவித்ரா அதற்கும் மேல் எதுவும் பேசவில்லை.
அவர்கள் இருவரும் வரும்வரை வாசலிலேயே காத்திருந்தார் லட்சுமி. காரில் இருந்து பவித்ரா இறங்கியதும் அவளிடம் ஓடியவர் "என்னம்மா என்னாச்சு? அந்த நோட்டீசை பார்த்திங்களா? என்ன போட்டு இருக்கு? யாரு அனுப்புனது ?" என கேள்வி மேல் கேள்வியாக கேட்க, எதற்கு பதில் சொல்வது என தெரியாமல் முழித்தாள் பவித்ரா.
"அம்மா எனக்கு கொஞ்சம் டீ வேணும். தலை வலிக்குது. அப்பறம் பேசுங்க ப்ளீஸ்" என்றபடி உள்ளே செல்பவனை முறைத்தவர் "இவன் எப்ப இருந்து இப்படி சாப்பாட்டு ராமன் ஆனான்னு தெரியல.."என்று முணுமுணுத்தபடியே உள்ளே சென்றார்.
"அப்படியா சொன்னான்????" இன்னும் நம்பமுடியாமல் உட்கார்ந்திருந்தார் லட்சுமி.
"ஆமாம்மா. அதான் அவரு சொன்னமாதிரி அந்த கமலக்கண்ணனனை போயி பார்க்கணும். அட்ரஸ் ஏதோ அடையார்ன்னு போட்டிருக்கு" அவளுக்கு யாரென்றே தெரியாத ஒருத்தனை சென்று பார்க்க பயமாக இருந்தது. அதை அவளால் வெளிப்படையாக சொல்ல முடியவில்லை.
லக்ஷ்மியால் அவளின் பயத்தை உணர முடிந்தது. அவளின் முகத்தை பார்க்கவே அவருக்கு பாவமாக இருந்தது, பாவம் சிறு பெண், அவளுக்கு இந்த வக்கீல் நோட்டீஸ் எல்லாம் என்ன தெரியும், எவனோ கமலக்கண்ணனாம் அவனை போய் பார் என இந்த சத்யா இந்த பிள்ளையிடம் சொல்லியிருக்கிறான்! அவனுக்கு மரை எதுவும் கழன்று விட்டதா? அவள் எப்படி பட்ட சூழ்நிலையில் இருந்து வந்திருக்கிறாள் என்று தெரிந்தால் ஒரு வேளை அவன் அவளிடம் இதெல்லாம் சொல்லியிருக்கமாட்டானோ?? ஆனால் அதை சொல்லும் சூழ்நிலையில் அவன் இருப்பதாக தெரியவில்லையே...ரெண்டு நாட்களாக பவித்ராவை பார்க்க