(Reading time: 10 - 19 minutes)
Kaarigai
Kaarigai

கூட செய்யாமல் இருக்கிறான். அவளுக்கு உதவியே வேண்டாம் என்றாலும் வழிய செய்து கொண்டிருந்தவன் இப்போது அவளுக்கு உதவி தேவை படும் நேரத்தில் நீயே செய் என்று கண்டுகொள்ளாமல் இருப்பது ஏன்? அவருக்கு மண்டையை பிய்த்து கொள்ளலாம் போல இருந்தது. அவருடைய யோசனையை கலைத்தது பவித்ராவின் குரல்.

"அம்மா உங்களுக்கு தெரிந்த நல்ல வக்கீல் யாராச்சும் இருக்காங்களா? சகுந்தலாம்மா வக்கீல் இப்போ இங்க இல்லை. பெங்களூரு போயிட்டாரு. வேற எந்த வக்கீல் கிட்ட போறதுன்னு தெரியல..."தயக்கத்துடன் லக்ஷ்மியின் முகம் பார்த்தாள் பவித்ரா.

சில நொடிகள் யோசித்தவர், "பவிம்மா, நீ கவலைப்படாதே. இந்த பிரச்சனை சால்வ் ஆகற வரைக்கும் சத்யா உன்கூடவே இருப்பான். நீ தைரியமா இரு" என உறுதியோடு சொன்னார் லட்சுமி.

"இல்லைம்மா. வேண்டாம். அவருக்கு ஆபீஸ் வேலை இருக்கும். அதுவும் இல்லாமல் நான் இங்க இன்னும் ஒரு வாரம் தான் இருப்பேன். அதுக்குள்ள இந்த பிரச்சனை தீருமானு தெரியல. அதுக்கு அப்பறம் எப்படி இருந்தாலும் நான் தான் தனியா பாக்கணும். அதனாலா அவரை தொந்தரவு செய்ய வேண்டாம். யாராவது நல்ல வக்கீல் தெரிந்தா அட்ரஸ் சொல்லுங்கம்மா. நான் போயி பாக்கறேன்" அவளுக்கு உள்ளே கலக்கமாக இருந்தாலும் அவனிடம் சென்று உதவி என நிற்க தோன்றவில்லை அவளுக்கு. அவன் ஏதோ தன்னை தவிர்ப்பதை போல ஒரு உணர்வு. சும்மாவாயினும் ஏதாவது வந்து பேசுவான் ஆனால் இந்த இரண்டு நாட்களாக அவள் புறம் திரும்புவதே இல்லை.

அவளோடு அவன் ஆஸ்ரமம் வரை வந்தாலும் ஏதேனும் உதவி வேண்டுமா என கேட்கவில்லை. அன்று ஏதோ அவனால் தான் எனக்கு உடல் நிலை சரியில்லாமல் போய்விட்டது என்று எண்ணி தான் ஆஸ்ரமத்திற்கு பணம் கொடுத்து உதவியிருக்கிறான் என்று எண்ணியவளுக்கு தான் ஏன் இப்படி எல்லாம் யோசிக்கிறோம், எதற்க்காக அவன் நமக்கு உதவ வேண்டும் என்று எண்ணுகிறோம் என்ற எண்ணம் தோன்றியது.

"என்ன பவிம்மா திடிர்னு ஏதோ யோசனைக்கு போயிட்ட? நான் சொன்னது புரிஞ்சுதா? சரி தான? " லட்சுமி கேட்க, அவர் அவளிடம் என்ன சொன்னார், என்ன புரிந்ததா என்று கேட்கிறார் என புரியாமல் முழித்தாள் பவித்ரா.

"சுத்தம், நான் சொன்னதையே நீ கவனிக்கல. அப்படி தான?? சரி மறுபடி சொல்றேன் கேட்டுக்கோ. இந்த வக்கீல் பிரச்னையை உன்கூட சேர்ந்து சத்யா பார்த்துக்குவான். நீ இந்த வீட்டை விட்டு போறதை பத்தி எதுவும் பேச கூடாது, இந்த பிரச்சனை எல்லாம் முடிந்து எனக்கு எப்போ நீ நிம்மதியா எந்த பிரச்சனையும் இல்லாமல் இருப்பேன்னு தோணுதோ

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.