(Reading time: 10 - 19 minutes)
Kaarigai
Kaarigai

"சத்யா, நான் உன் அம்மா. எனக்கு  நீ பண்ற சின்ன சின்ன விஷயம் கூட புரியும். இப்போவும் உன்கிட்ட இருக்கற மாற்றம் புரியுது. ஆனா புரியல..."   என்றவரை கண்டு சிரித்தான்  சத்யா.

"என்னம்மா நீங்க எஸ் ஜெ சூர்யா மாதிரி இருக்கு இல்லைனு பேசிட்டு இருக்கீங்க?" சத்யா சிரித்தான்.

"பீ சீரியஸ் சத்யா. காமெடி பண்ணி என்னை டைவர்ட் பண்ண ட்ரை பண்ணாத.  அது முடியாது " லட்சுமி சீரியஸாக சொல்லவும்,

"சரிம்மா சொல்லுங்க உங்களுக்கு என்ன கேக்கணும்?" சத்யாவும் விளையாட்டு தனத்தை விட்டு விட்டு கேட்டான்.

உனக்கு பவி மேல ஏதாவது கோவமா சத்யா?" -லட்சுமி

"இல்லையேம்மா . ஏன் சடென்னா இப்படி கேக்கறீங்க?" -சத்யா "இல்லை சத்யா நீ பவியை அவொய்ட் பண்ற மாதிரி இருக்கு. அதான்" லட்சுமி கேட்க, "சே சே இல்லைம்மா." சத்யா அவசரமாக மறுத்ததை கண்ட லக்ஷ்மிக்கு  உண்டானது.

"அப்பறம் ஏன்ப்பா அவளுக்கு பிரச்சனைன்னு சொல்லியும் நீ எதுவுமே கண்டுக்கல? அவளையே போயி பாக்க சொன்னியாமே அந்த ஆளை. எனக்கு புரியவே இல்லை. " லட்சுமி சொல்ல, "யாரும்மா சொன்னா நான் கண்டுக்கவே இல்லைனு?" என்றவன் சொல்ல சொல்ல லக்ஷ்மியின் முகத்தில் அதிர்ச்சி, ஆச்சர்யம், சந்தோஷம், நிம்மதி என எல்லாம் மாற்றி மாற்றி வந்தது.

"எனக்கு உன் மேல  நம்பிக்கை இருக்கு சத்யா. எல்லாம் நல்ல படியாவே நடக்கும்னு நம்புவோம். அந்த கடவுள் துணை இருப்பான் பா."என்றார் சத்யாவின் .கோதியபடி நம்பிக்கையுடன்.

"அம்மா அப்பறம் ஒரு விஷயம் இதெல்லாம் எந்த காரணம் கொண்டும் பவித்ராவுக்கு தெரிய வேணாம். தெரிஞ்சா இந்த   வீட்டை விட்டே, இல்லை இல்லை இந்த ஊர விட்டே போயிடுவா." சத்யா சொல்ல, "ப்ரோமிஸ் சத்யா. இது நம்ம ரெண்டு பேரையும் தாண்டி வெளிய போகாது." சொன்னவர் நிம்மதியுடன் வெளியேறினார் அந்த அறையை விட்டு இனி எல்லாம் நல்லதே நடக்கும் என.

Episode # 11

Episode # 13

தொடரும்

Go to Kaarigai story main page

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.