"மம்மி குட்…"
"உண்மை அதை நிருபிக்காமல் விட மாட்டேன். அதற்குதான் அதிரதனை அங்கு அனுப்பி இருக்கிறேன். உனக்கும்…"
கை அசைத்து மறுத்ததாள்… அவள் மூச்சு வாங்கும் சப்தம் கேட்டது.
"குட்டிம்மா நீ இப்ப ஓய்வெடுக்கணும்."
மீண்டும் தரையில் எதையோ எழுதினாள்.
"அதிக்கு அபியை தெரிய வேண்டாம். வேறு யாருக்கும் தெரியக் கூடாது."
"சொல்ல மாட்டேன். நீ ரெஸ்ட் எடும்மா" ப்ரூனே உறுதியளித்தார்.
சற்று பொறுத்து கனப்பு அடுப்பின் உள்ளே அமைதியாக இருக்கவும் எழுந்து வெளியே வந்தார்.
கூடத்தில் மாட்டியிருந்த குழந்தைகள் படங்களை பார்த்தார்…
க்ருபா ப்ரூனேவாக மாறி இங்கு வந்து பதிநான்கு வருடங்களாகி விட்டன. அவருடைய பூர்வீக சொத்துக்களை கொண்டு ஒரு ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்தை ஆரம்பித்தார். கங்காதரன் அதை பார்த்துக் கொண்டார். ப்ரூனேவாக மாறியபின் அவர் முன்னியையும் பார்க்க வில்லை.
கங்காதரன்தான் மகனை மரபணுவியல் படிக்க வைத்து… அதிதியை திருமணம் செய்ய வைத்து… மைத்துனனுக்கு உதவி செய்ய ஆரம்பித்தார். க்ருபாவிற்கு இன்னும் சில கடமைகள் இருநதன.
துளசி தூய்மையானவள் என்பதை நிருபிக்கணும். அபிதாவை பழைய நிலைக்கு கொண்டு வரணும். அதிதியும் அதிரதனும் மகிழ்ச்சியாக வாழனும்… அதன் பிறகுதான் க்ருபாவின் உயிர் பிரியணும்…
அதிரதனுக்கு அபிதாவை பற்றி தெரிந்தால்தான் அவளை சரி செய்ய முயற்சிக்கவும் வைக்கலாம். அதை எப்படி செய்வது… அபிதாவைபற்றி அவராக சொல்லவும் முடியாது… அவரைபற்றிகூட அவனிடம் அவரால் சொல்ல முடியாது… என்ன செய்வேன் ஆண்டவா..?
அவருடைய வேண்டுதலுக்கு இறைவன் செவி சாய்க்க ஆரம்பித்து விட்டார் போலும்…
கையில் 'ஸ்பெஸிமன்' பற்றிய ஃபைலுடன் அதிரதனைத் தேடி தாதிபட்டிக்கு வினய் வந்து கொண்டிருந்தான்.
தொடரும்