புறமாக நகர்ந்து கொண்டிருந்த வண்டிகளில் கூட்டத்தில் தன்னுடைய காரை செலுத்தி கொண்டிருந்த சத்யா, அந்த ஆட்டோவில் அமர்ந்திருந்த பவித்ராவை பார்த்தான்.
"இவ எங்க இந்த பக்கமா போறா?" என்ற யோசனையுடன் கார் கண்ணாடியை திறந்து அவளை அழைக்க, அந்த ஹாரன் சத்தங்களில் அவன் அழைப்பு அவளை எட்டியிருக்கவில்லை. காரை ஒரு ஓரமாக நிறுத்தியவன், லக்ஷ்மியை அழைத்தான்.
"அம்மா, பவித்ரா எங்க போயிருக்கா?" -சத்யா
"ஆஸ்ரமம் போறேன்னு சொல்லிட்டு போனாப்பா. ஏன் என்னாச்சு?" லட்சுமி கேட்கவும், "ஒன்னும் இல்லைம்மா. சரி நானும் அப்படியே ஆஸ்ரமம் போயிட்டு வரேன்" என்று அழைப்பை துண்டித்தவன், வண்டியை திருப்பி கொண்டு அவள் வந்த ஆட்டோ சென்ற வழியே சென்றான். தூரத்தில் அந்த ஆட்டோ செல்வது தெரிந்தது. அந்த போக்குவரத்து நெருக்கடியில் அவனால் அந்த வண்டியை வேகமாக நெருங்க முடியவில்லை. அந்த ஆட்டோவை தவற விட கூடாது என்று அந்த வண்டியையே கவனித்து கொண்டு சென்றவன் அடுத்து வந்த சிக்னல்லில் தவற விட்டான்.
அந்த சிக்னல் விழுந்ததும் எங்கேனும் அந்த வண்டி தட்டுப்படுகிறதா என பார்த்தபடி வந்தவன் அந்த வண்டி கண்ணுக்கெட்டிய தூரம் வரை காணாமல் என்ன செய்வது என தெரியாமல் அங்கிருந்த ஒரு மரத்தின் அடியில் காரை நிறுத்தி விட்டு கீழே இறங்கினான். ஆஸ்ரமம் போவதாக அம்மாவிடம் சொல்லிவிட்டு எங்கே போனாள் இவள்? அவனுக்கு கோவம் வந்தது.
சிறிது தூரத்தில் அதே ஆட்டோ திரும்பி வருவதை கண்டவன் ஓடி சென்று கை காட்டினான்.
"அண்ணா இப்போ ஒரு பொண்ணு உங்க வண்டியில வந்துச்சே. அந்த பொண்ணு எங்க?" -சத்யா
"அந்த பொண்ணு இறங்கிடுச்சுப்பா" -டிரைவர்
"எங்க இறங்குனா?" -சத்யா
"மேட்டுக்குப்பம் மீன் மார்க்கெட் கிட்ட இறங்குச்சுப்பா" டிரைவர் சொன்னா அடுத்த நொடி அவன் வண்டி மேட்டுக்குப்பம் நோக்கி சென்று கொண்டிருந்தது.
"இவ எதுக்கு அந்த மாதிரி ஏரியாக்கு எல்லாம் போறா? ஏதோ பிரச்சனை" என அவன் மனம் எச்சரித்தது. அந்த மீன் மார்க்கெட் முன் வண்டியை நிறுத்தியவன் கண்கள் அந்த ஏரியாவை சுற்றி வந்தது.
காரில் இருந்து கீழே இறங்கியவன், மெல்ல அந்த மீன் மார்க்கெட்டை தாண்டி சில அடிதூரம் செல்ல, அங்கே ஒரு பழைய கார்களை நிறுத்தும் இடம் இருந்தது. அதன் அருகே சென்றவனுக்கு ஏதோ பேச்சு குரல் கேட்கவும், மெல்ல பூனை நடை நடந்து அங்கு எட்டி