பார்த்தவன் இருதயம் ஒரு நிமிடம் துடிக்க மறந்து போனது.
"இங்க பாரு இந்த பேப்பர்ல எல்லாம் கையெழுத்து போட்டுட்டு இந்தா நீ கொண்டு வந்துருக்கியே அந்த பேப்பர் எல்லாம் சார்கிட்ட கொடுத்துட்டு ஓடி போயிடு" இரண்டு தடியர்கள் பவித்ராவின் இருபுறமும் நின்று மிரட்டி கொண்டிருக்க, கமலக்கண்ணன் எதிரே ஒரு சேரில் கால் மேல் கால் போட்டு அமர்ந்து சிரித்து கொண்டிருந்தான்.
"என்னம்மா அப்படியே நிக்கற, சொன்னது கேக்கலையா? " ஒருவன் அவளிடம் நெருங்கி அவள் கையில் இருந்த அந்த பைலை பிடித்து இழுக்க, அவன் முகத்தில் இடியென இறங்கியது சத்யாவின் கை.
அவனை கண்டு அதிர்ந்து போனது கமலக்கண்ணன் மட்டும் அல்ல, பவித்ராவும் தான். தான் இங்கே வந்தது அவனுக்கு எப்படி தெரிந்தது என்று அவளுக்கு புரியவில்லை.
"ஏண்டி உன்னை தனியா வர சொன்னா அடிக்க ஆளை கூட்டிட்டு வந்துருக்கியா..." என்ற கமலக்கண்ணன் பவித்ராவின் தலைமுடியை பிடிக்க, அடுத்த நொடி "ஐயோ அம்மா" என மூக்கை பிடித்து கொண்டு கீழே சரிந்தான் கமலக்கண்ணன். சத்யா அடித்த அடியில் மூக்கில் இருந்து ரத்தம் சொட்டிக்கொண்டிருந்தது அவனுக்கு. அடுத்த சில நிமிடங்களில் அந்த மூன்று பேரும் கீழே கிடந்தனர்.
அங்கு அந்த நிலையில் பவித்ராவை பார்த்த அடுத்த நொடி தனக்கு தெரிந்த போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு ஒரு வாய்ஸ் மெசேஜ்ஜூம் அந்த இடத்தையும் வாட்ஸாப்ப்பில் அனுப்பியிருந்ததால் போலீசும் அங்கே வர, அவர்கள் மூவரையும் இழுத்து கொண்டு சென்றனர் அங்கிருந்து.
அப்போது தான் சத்யாவின் கையில் இருந்து வழிந்த ரத்தத்தை கண்டாள் பவித்ரா.
"ஐயோ ரத்தம்" என அவன் அருகே ஓடியவள் அவன் கையை பிடிக்க, அடுத்த நொடி கையை உதறி கொண்டு காரை கொக்கி சென்றான் சத்யா.
காரில் அமர்ந்தவன் வண்டியை ஸ்டார்ட் செய்ய, அவன் அருகே அமர்ந்த பவித்ராவின் பார்வை அவன் கையிலேயே இருந்தது. அவன் கையில் இருந்து வழிந்த ரத்தம் அவன் சட்டையை நனைத்திருந்தது.
"சத்யா ரத்தம் வருது. பர்ஸ்ட் எய்ட் பண்ணனும்" அவள் பதற்றத்துடன் அவள் துப்பட்டாவை எடுத்து அவன் கையின் அருகே செல்ல, கார் வேகமெடுத்து அந்த சாலைகளில் விரைந்தது. காரை செலுத்தும் போது உண்டான அழுத்தத்தில் கையில் இருந்து இன்னும் ரத்தம் வர, பவித்ராவுக்கு பயத்தில் என்ன செய்வதென்றே புரியவில்லை. வீட்டின் முன் காரை நிறுத்தியவன் காரில் இருந்து இறங்கி அந்த கார் கதவை ஓங்கி அறைந்த வேகத்தில்