(Reading time: 11 - 22 minutes)
Kaarigai
Kaarigai

தெரிந்தது அவனது கோவம்.

"ஐயோ சத்யா என்ன இது கையில ரத்தம்" அவன் கைகளில் வழிந்த ரத்தத்தை கண்ட லட்சுமி ஓடி வந்து அவன் கையை பிடித்து பார்த்தார்.

"என்னடா ஆச்சு, பவிம்மா என்னாச்சு...எப்படி ஆதி பட்டுச்சு" லட்சுமி கேட்க, பவித்ராவுக்கு என்ன சொல்வது என தெரியாமல் தலையை குனிந்து நின்றாள்.

"அவளை ஏன் மா கேக்கறீங்க. என்னை கேளுங்க. மேடம் அந்த பொருக்கி கமலக்கண்ணனை பாக்க தனியா போயிருக்காங்க, உங்ககிட்ட ஆஸ்ரமம் போறேன்னு பொய் சொல்லிட்டு" அவன் கண்களில் கோபம் தெறித்தது.

"பவித்ரா நிஜமாவா?" லட்சுமி நம்ப முடியாமல் பவித்ராவை பார்த்தார்.

அவள் தலை குனிந்து நின்ற விதமே அதை உண்மை என சொல்ல, "ஏன்மா எவ்வளவு ஆபத்துனு தெரிஞ்சும் ஏன் போன?" லட்சுமி பவித்ராவை பார்த்து கேட்டார்.

"அம்மா அவன் நான் வரலைனா ஆஸ்ரமத்தை எரிச்சுடுவேன்னு சொன்னான். அதான்..." பவித்ரா நடுங்கும் குரலில் சொன்னாள்.

"அவன் சொன்னா, உனக்கு அறிவு இல்ல? என்கிட்டே ஒரு வார்த்தை சொல்ல தோணலை? " இன்னும் கோபத்துடன் ஒலித்தது சத்யாவின் குரல்.

"இல்லை, தேவை இல்லாமல் இந்த பிரச்சனைல உங்கள மாட்ட வைக்க வேண்டாம்னு தான். இது என் பிரச்சனை தான. நானே பார்த்துக்கலாம்னு நெனச்சேன்" பவித்ரா கண்கள் நிறைந்து போனது.

"கிழிச்ச...அவன் ஒரு பொறுக்கி...அவன் என்ன வேணாலும் பண்ணுவான். அதெல்லாம் யோசிக்காம நீ போயிருக்க...உனக்கெல்லாம் வாழ்க்கைல எவ்ளோ " சத்யா சொல்லி முடிக்கும் முன் "சத்யாயாயா..." என்ற லக்ஷ்மியின் சத்தத்தில் அதிர்ந்து போனான் சத்யா. அவன் என்ன சொல்ல வருகிறான் என்று யூகித்த லட்சுமி கத்த, அப்போது தான் உணர்ந்தான் சத்யா தான் எவ்வளவு பெரிய தவறை செய்யவிருந்தோம் என.

"பவித்ரா நீ உள்ள போம்மா" லட்சுமி பவித்ராவை நோக்கி சொல்ல, கண்களில் வழிந்த கண்ணீரை துடைத்தவள் உள்ளே சென்று பர்ஸ்ட் எய்ட் பாக்ஸை கொண்டு வந்து லக்ஷ்மியின் கைகளில் கொடுத்து விட்டு அவள் அறையை நோக்கி சென்றாள்.

சத்யாவின் அருகே வந்தவர் அவனின் காயத்தை துடைத்து மருந்திட்டு கட்டியவர் அங்கிருந்து நகர்ந்தார்.

தலையில் கையை வைத்து அமர்ந்தான் சத்யா. எவ்வளவு பெரிய தவறை செய்திருப்பான் அம்மா மட்டும் தடுக்கவில்லை என்றால். அவன் மட்டும் அந்த வார்த்தைகளை

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.