(Reading time: 10 - 19 minutes)
Marulathe maiyathi nenche
Marulathe maiyathi nenche

ஏன்?.

அவள் ஆழ் மனதில் மறைத்து வைத்த அவனை பற்றிய  ரகசியம் வெளிப்பட்டு இருக்கும் என்று நினைக்கிறாள். அப்படி என்றால் அவளுக்கு அவனிடம் ஒரு ப்ரியம்.. உருவாகி இருக்கிறது. மாட்டிகிட்டியா…?

அவனையே பார்த்து கொண்டிருந்தவளை பார்த்து விஷமமாக இளித்து வைத்தான். அதிதி திடுக்கிட்டாள்.

'யார்ட்ட டைவர்ஸ் கேம் விளையாடுறஇதை வைத்தே உன்னை ரகளை விடுகிறேனா இல்லையான்னு பார்த்துக்க' மனதிற்குள் கறுவினான்.

அப்போது கங்காதரன் வந்துவிட… மேற்கொண்டு அதிதி விளக்கம் கேட்க முடியவில்லைஅன்றைக்கு அதற்கான சந்தர்ப்பம் அவளுக்கு கிடைக்கவில்லை.

அதிரதன் அவள் சுயநினைவில் இல்லாதபோது நடந்தவற்றை சொன்னான். அஞ்சலை செய்த சூழ்ச்சியை அவளிடம் விளக்கினான். ஊர் பஞ்சாயத்து கூடி அஞ்சலையை விசாரித்ததையும் சொன்னான். கன்னியம்மா துளசிக்கு செய்த சதியையும் ஊர் மக்கள் அதை புரிந்து கொண்டதையும் தெளிவாக்கினான்

"அதுக்குதான் மாமா இங்கே வந்திருக்காரா?"

"ஆமாம் நாளைக்கு பஞ்சாயத்து இருக்குமா.. அந்த அஞ்சலையை நான் சும்மா விடப் போவதில்லை." கங்காதரன் சீறினார்.

"மாமா.. சித்தி முட்டாள்தனமாக செய்து விட்டார்கள்"

"நீ என் மருமகள். உனக்கு ஒரு அவமானம் என்றால் அது எங்களையும பாதிக்கும். ஒரு குடும்பத்தை கலைக்க நினைப்பது மன்னிக்க கூடிய செயல் இல்லை."

அவருடைய கோபத்தை பார்த்து அதிதி திகைத்து நின்றாள். அதை பார்த்த அதிரதன்

"நீங்க சொல்றது கரெக்ட் டாட்அதிதி மட்டும் சம்பந்தப்பட்ட விஷயம் இல்லை. நம் குடும்ப மரியாதையும் கலந்து இருக்கிறது." என்றவன் அதிதியிடம் திரும்பி,

"நாளைக்கு பஞ்சாயத்துல சித்தி பாவம்.. அது இதுன்னு சொன்னே எனக்கு கெட்ட கோபம் வந்திடும்" என்றான்.

"கோபப்படாதீங்கஅவங்க ஏன் அப்படி செஞ்சாங்கன்னு தெரியணும். நான் அவங்களை ஏதாவது ஒரு வகையில் பாதித்து இருக்கலாம்."

"அதிதி உனக்கு இதோட சீரியஸ்னஸ் புரியவில்லை. நான் மட்டும் சரியான சமயத்திற்கு வராமல் போயிருந்தால் துளசி அத்தையின் நிலமைதான் உனக்கு ஏற்பட்டிருக்கும்."

"அது…" 

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.