அவன் மனைவி சந்தேகிக்க... அவனோ அவள் தன்னை அவமானப்படுத்துவதாக நினைக்க… டைவர்ஸில் போய் முடிந்தது."
"குழந்தை வளர்ப்பு அவ்வளவு பெரிய பிரச்சினையா…?"
"எனக்கு தெரியாதும்மா.. அனுபவிச்சாதான் தெரியும்"
"நாங்கள் ரெண்டு பேரும் அப்படி நடந்து கொண்டதில்லையே.. அப்பாவிடம் கொஞ்சம் கூடுதல் செல்லம் கொஞ்சியிருப்போம்… "
"ரொம்பவும் கவலைபடாதே.. அவர்களுக்கு அந்த சூழ்நிலையை பேலன்ஸ் செய்யத் தெரியவில்லை.. தட்ஸ் ஆல்.."
"அதுக்கு கொடுத்த விலை ரொம்பவும் அதிகம் ரதன். அதிலும் அபிக்கா ரொம்ப பாவம்…"
அபிதாவை பற்றி அதிதியிடம் சொல்லி விடலாமா என்று அதிரதன் யோசித்தான். அதை பற்றி பேசியாக வேண்டும் என்ற நினைப்பே அவனுக்குள் ஒரு அழுத்தத்தை உருவாக்கியது.
ஆனால் அதிதி அவனிடம் அடுத்து கேட்ட கேள்வி அவனுடைய எண்ணத்தை மாற்றி விட்டது. பூத்து குலுங்கும் நந்தவனத்திற்குள் இருக்கும் எஃபெக்டை சட்டென்று உணர்ந்தான்.
"ஆங்… நான் சுயநினைவில் இல்லாதபோது உங்ககிட்ட ஏதாவது தப்பா நடந்துகிட்டேனா…?"
"ம்ஹும்.. சரியாத்தான் நடந்து கிட்ட" சத்தம்போட்டு சிரித்தபடி அவன் மீது சொல்லவும்…
அதிதி முகம் சிவந்தாள்…
"இதுக்கு என்ன அர்த்தம்?"
"உன்னுடைய ஆழ்மனதில் என்ன இருக்கிறது என்பது எனக்கு தெரிஞ்சுட்டதுனு அர்த்தம்"
அச்சோடா… அதிதி திணறினாள்.
தொடரும்