(Reading time: 10 - 19 minutes)
Marulathe maiyathi nenche
Marulathe maiyathi nenche

"அம்மா தாயே.. நீ தூங்கலை. முழிச்சிட்டுதான் இருந்தஆனால் சுயநினைவு இல்லாமல் இருந்தநடந்த எதுவும் உனக்கு நினைவில்லை"

"என்ன சொல்றீங்க.. "

"ஆமா அந்த லட்டுல மருந்து கலந்து இருந்தது."

"சித்தி கொடுத்ததுலயா?. அவங்க ஏன் அப்படி செய்யணும்?"

"தள்ளாடி தடுமாறி நடந்து நீ அவமானப்படனும்"

"நான் நம்ப மாட்டேன்"

"ஹாங்என்னை நம்ப மாட்டேன்னு தெரியும்.. அதனாலதான் ப்ளட் டெஸ்ட் எடுத்து வச்சிருக்கேன். படிச்சு பாரு" ரிப்போர்ட்டை நீட்டினான்.

அதை வாங்கி படித்தாள்.

"நாஸ்டால்ஜியான்னா…?. லைஜிரிக் டை எதிலமைட்னா?"

"லைஜிரிக் டை எதிலமைட் மூளையை பாதிக்கும் இராசயனம். நாஸ்டால்ஜியா எனப்படும் ஆழ் மனதில் படிந்திருக்கும்  நினைவுகளை கிளப்பி விடும். நீ யாரையாவதுஎதையாவது மிஸ் பண்ணிட்டதா நினைச்சா நமக்கு எதிரில் யார் இருந்தாலும் அவங்க போல தோற்றம் காட்டும்"

"அதனால…"

" நம்முடைய ஆசைகளை அவங்களை கொண்டு நிறைவேத்திக்க முயற்சிப்போம்"

அதிரதன் அவனுக்கு தெரிந்த வகையில் அதிதிக்கு விளக்கிக் கொண்டிருந்தான்… அதிதியோ அவள் புரிந்து கொண்ட விளக்கத்தை கற்பனை செய்ய பார்த்தாள். அவள் சுயநினைவில்லாமல் இருந்தபோது என்ன செய்திருப்பாள்?

ஒரு குடிகாரன்போல தள்ளாடி… தள்ளாடிசே.. சே.. அப்படி இருந்திருக்காது. ஆழ்மனதின் ஏக்கங்கள் வெளிவந்தால் என்னவாகும்? அதை தீர்த்து கொள்ள முயற்சித்திருப்பாளோஅப்படித்தான் ரதனும் சொன்னான்.

அவன் கேலியாக வேறு பேசினானே… பார்வைகூட கேலி பேசியதேஏதோ நடந்திருக்கும் போல

அவள் கலவரமாக அவனை பார்க்க… அதிரதனுக்கு எதுவும் புரியவில்லைஏன் அப்படி பார்க்கின்றாள்?. கொஞ்சம் சந்தேகம்.. கொஞ்சம் பயம்கொஞ்சம் குழப்பம்.. அப்புறம்ம்.. காட் இட்திருடனுக்கு தேள் கொட்டியது போலசம்திங் ஃபிஷ்ஷி.!

வாவ்.. விஷயம் அப்படி போகுதா?... ஏதோ தப்பா நடந்துகிட்டோமோ என்று பயப்படுகிறாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.