Page 5 of 11
காய்ச்சலால் முகமெல்லாம் சிவந்து போயிருக்க, குளிரில் மெல்ல முனகல் சத்தம் வந்தது அவனிடம் இருந்து. ஏ சி ஆனில் இருப்பதை கண்டவள் அதை நிறுத்திவிட்டு மூடியிருந்த ஜன்னலை எல்லாம் திறந்து திரை சீலைகளை அகற்றினாள். அந்த அறைக்குள் வெளிச்சம் பரவியது.
அவன் கைகளையும் கால்களையும் மடக்கி ஒருக்களித்து படுத்திருந்தை கண்டவள் அங்கே இருந்த ஒரு போர்வையை எடுத்து அவனின் மேல் போர்த்தினாள்.
...
This story is now available on Chillzee KiMo.
...
ண்டும் கண்களை மூடியவன், "சார் கொஞ்சமா கஞ்சி சாப்பிடுங்க சார்" என்ற குரலில் மீண்டும் கண்களை திறந்தான்.
இது கனவு இல்லை என்பது புரிந்தது அவனுக்கு. அவன் கண்களில் ஆச்சர்யம் வந்தது.