செய்திருந்தது.
"பவி...' அவன் குரலில் என்னவோ இருந்தது. அது அவளை நிமிர்ந்து பார்க்க சொன்னது. கண்களை மெல்ல மலர்த்தியவளின் பார்வையில் அவன் கேட்காததற்கு எல்லாம் பதில் இருந்தது.
"தம்பி அர்ச்சனை யாரு பேருல?" அருகே வந்த அய்யர் கேட்கவும், "சாமி பேருல" என அவரிடம் பூஜை தட்டை நீட்டியவன் பார்வை இன்னும் பவித்ராவை விட்டு நகரவில்லை.
"ச...சத்யா...தீபாராதனை காட்றாங்க" அவளையே பார்த்து கொண்டு இருந்தவரனிடம் சொன்னாள் பவித்ரா.
அய்யர் கொடுத்த அந்த பூஜை தட்டை பெற்று கொண்ட பவித்ரா மெதுவாக முன்னால் நடக்க அவள் பின்னே நடந்தான் சத்யா. மெளனமாக பிரகாரத்தை சுற்றி வந்தவர்கள் அந்த குளத்தின் படிக்கட்டை நோக்கி செல்ல, "அம்மாடி ஒரு நிமிஷம்மா" என்ற குரலில் நின்றனர் இருவரும்.
"இன்னைக்கு அம்மனுக்கு பட்டு சாத்தி பூஜை பண்ணுனோம். அதை யாரவது ஒரு பொண்ணுக்கு தரணும். இந்தாம்மா" என அவளை நோக்கி ஒரு தட்டை நீட்டினார். அதில் பட்டு புடவையும் பூச்சரமும் மஞ்சளும் குங்குமமும் வைத்திருந்தது.
"தம்பி அந்த குங்குமத்தை எடுத்து அவங்க நெத்தில வையுங்க. அம்மன் பிரசாதம். நீங்க ரெண்டு பெரும் நூறு வருஷம் சந்தோசமா வாழனும்" அந்த பெண்மணி சொல்ல, சத்யாவின் பார்வை பவித்ராவிடம் சென்றது. பவித்ரா முகம் வெட்கபூக்களால் நிர்மப்பியிருக்க தலை குனிந்து நின்றிருந்த கோலத்தை அவளின் சம்மதமாய் கொண்டவன் விரல் அவளின் நெற்றியில் அந்த குங்குமத்தை வைக்க அந்த நிமிடம் அவளின் உடலில் தோன்றிய சிலிர்ப்பு அவள் இதுவரை உணராதது.
கையில் இருந்த பட்டு புடவையை வருடியபடி சொல்ல வந்ததை சொல்ல முடியாமல் தவிப்பு ஒருபுறமும் இவனாக புரிந்து கொள்ள மாட்டானா என்ற ஏக்கம் மறுபுறமுமாக அவஸ்தையாக அமர்ந்திருந்த பவித்ராவை கண்ட சத்யாவின் உதடுகள் புன்னகையில் விரிந்தது. அவளை அதற்க்கு மேலும் அவஸ்தைக்குள்ளாக்க விரும்பவில்லை சத்யா.
"பவி ..."அவனின் குரலில் நிமிர்ந்தாள் பவித்ரா.
"இதை நான் சம்மதமா எடுத்துக்கலாமா?" சத்யாவின் கேள்வியில் கன்னம் மேலும் சிவக்க தலையை குனிந்தவள் ஆமாம் என்பதாக தலை அசைத்தாள் உதட்டில் சிறு முறுவலுடன்.
அவனின் முகத்தை காண அவனின் சந்தோசத்தை காண எழுந்த ஆவலை அடக்க முடியாமல் நிமிர்ந்து பார்த்தாள் பவித்ரா.
அவளின் கையை எடுத்து தன கையில் வைத்தவன் "தேங்க்ஸ் பவித்ரா. என்னுடைய