Page 5 of 5
வாழ்க்கையின் மிக முக்கியமான நாள் இது. எனக்கு தெரியும் என் வாழ்க்கை நீ இல்லாமல் அமையாதுனு. எனக்கு என் காதல் மேல நம்பிக்கை இருந்தது. உன்னை எந்த நாளும் எந்த ஒரு சிறு காயமும் இல்லாமல் என் உயிர் உள்ளவரை பாதுகாப்பேன்" சத்யா சொல்ல கண்கள் கலங்கியது பவித்ராவுக்கு.
அவளின் விழி நீரை துடைத்தவன் தோளில் சாய்ந்து கொண்டாள் பவித்ரா. இந்த காதலும் அரவணைப்பும் காலம் எல்லாம் கிட்டும் என்ற நிம்மதியில் அந்த பிறைநிலவு இன்று முழு நிலவாக ஜொலித்தது.
நானும் நீயும் காலம் எழுதி
காற்றில் வீசிய நாடகம்
அந்த காற்றே மீண்டும் இணைத்து
அரங்கம் ஏற்றும் காவியம்
தேவ முல்லை பூக்கும் கொல்லை
கொண்டதே என் வீட்டின் எல்லை
என்னை நீ மறவாதிரு
புயல் காற்றிலும் பிரியாதிரு
முற்றும்