வாழ்க்கைக்கான ஒரு நல்ல துணையை தேடிக்கணும். இதுக்கு உங்களுக்கு சம்மதம்னா நான் அந்த ஒரு வருஷமும் இங்கயே உங்க கூடவே இருக்கேன்." பவித்ரா சொல்ல, "இவள் வேறு எதுவும் யோசிக்கிறாளோ" என அவள் முகம் பார்த்தவன் அவளின் முகத்தில் இருந்த உறுதியை கண்டான்.
"நிச்சயம் அவள் மனதை மாற்ற தன்னால் இயலும்" என்ற நம்பிக்கை இருந்தது சத்யாவுக்கு.
"சரி பவித்ரா. சம்மதம். நீ சொன்ன மாதிரி உனக்காக நான் ஒரு வருஷம் என்ன ஒரு ஜென்மம் கூட காத்திருக்கிறேன்" எனவும் ஒரு சின்ன தலை அசைப்புடன் அந்த அறையை விட்டு வெளியே வந்தாள் பவித்ரா.
தன அறைக்கு வந்த பவித்ரா அங்கிருந்த தன்னுடைய பர்சில் இருந்த டாக்டர் வித்யாவின் எண்ணை தேடி எடுத்தாள்.
"ஹலோ டாக்டர் நான் பவித்ரா பேசறேன். நான் நாளைக்கு உங்களை பாக்கணும். எனக்கு கொஞ்சம் அப்பாயிண்ட்மெண்ட் வேணும்." அவரிடம் பேசி அடுத்த நாள் அவரை காண நேரம் குறித்து கொண்டாள்.
"பவித்ரா, எனக்கே ஆச்சர்யமா இருக்கு. டிரீட்மென்ட் பாதில விட்டுட்டு போயும் கூட உன்கிட்ட இவ்ளோ இம்ப்ரூவ்மென்ட்ஸ் இருக்கறது ரியலி அமேஸிங்" டாக்டர் சொல்லவும், "உண்மை தான் டாக்டர் சத்யா எனக்கு கொடுத்த நம்பிக்கை தான் இதுக்கெல்லாம் காரணம். எனக்கு தெரியும் அவரு உங்களை வந்து பார்த்தது...அது...அது விஷயமா தான் எனக்கு உங்க ஹெல்ப் வேணும் மேம்" பவித்ரா சொல்லவும் டாக்டர் புன்னகையுடன் தொடர்ந்தார்.
"பவித்ரா, ஒரு டிரீட்மென்ட் எப்போ சக்ஸஸ் ஆகும் தெரியுமா? அது மேல அந்த பேஷண்ட்க்கு நம்பிக்கையும் அதுக்கு ஒத்துழைக்கணும் அப்படிங்கற எண்ணமும் வரும்போது தான். உனக்கு அந்த எண்ணம் இருக்கு, நீ கவலை படாத. என்னால முடிஞ்ச அளவுக்கு நான் எல்லா விதத்துலையும் உதவறேன்." டாக்டர் சொன்னதை கேட்ட பவித்ரா, சற்றே தயங்கவும் அவளின் தயக்கத்தை உணர்ந்தவர் "என்ன பவித்ரா ஏதோ தயங்கர? என்னனு சொல்லு" என்று அவளை ஊக்கினார்.
தனக்கும் சத்யாவுக்கு இடையே நடந்த அந்த உரையாடலை சொன்னவள் "அவரு சொன்னது போல எனக்காக அவரு எவ்ளோ நாள் வேணாலும் காத்திருக்கலாம், ஆனால் என்னால அவரை அப்படி காத்திருக்க வைக்கமுடியாது. ஒரு வருஷத்துல எனக்கு என் மேல நம்பிக்கை வரணும். என்னால இந்த கல்யாண வாழ்க்கையை ஏத்துக்க முடியும்னு அப்போதான் என்னால அவருக்கு சம்மதம் சொல்ல முடியும்" என்றாள் பவித்ரா.
இதோ இன்றோடு அந்த ஒரு வருடம் முடிகிறது. சத்யாவுக்கு நன்றாகவே நினைவில்