சஞ்சய் சிறுவனாக இருக்கையில் ஓர்நாள் “தாத்தா உங்களுக்கு தனுஷ் அண்ணாவைத் தான் பிடிக்கும் என் மேல பிரியமே இல்ல” என முகத்தைச் சோகமாக வைத்துக் கொண்டான்.
மழலை சஞ்சையைக் கொஞ்சி முத்தமிட்டு தன் மடியில் அமர்த்தி “அப்படிலாம் இல்லடா கண்ணா” சமாதானம் செய்தார்.
தனுஷ் உடனே “பாரு சஞ்சய் . . தாத்தா உனக்காக ரெண்டு சாக்லேட் வாங்கிட்டு வந்திருக்காரு. உன்னைத்தான் தாத்தாக்கு ரொம்ப பிடிக்கும் “ என் தன்னுடையதை சேர்த்தேக் கொடுத்து விட்டான்.
இப்படியான பல செயல்களால் தனுஷ் தாத்தா மனதை அவன் அறியாமலே கவர்ந்துவிட்டான்.
தனுஷ் பிறந்த அடுத்த சில நிமிடங்களில் தாத்தாதான் அவனைக் கையில் ஏந்தினார். அவர் கையில் பிஞ்சு குழந்தை கண் மூடி துயில் கொண்டிருக்க . . . சந்தோஷ மிகுதியில் கண் கலங்கிவிட்டார். கண்ணீர் கன்னத்தில் உருண்டோடத் துடைக்கக் கூட தோன்றாமல் அப்படியே குழந்தை நெற்றியில் முத்தமிட்டார். அப்பொழுது குழந்தை சிணுங்கி தன் சின்னஞ்சிறு கையை அசைக்க அது அவர் கன்னத்தில் பட்டது.
அவரோ தன் கண்ணீரைப் பேரன் துடைத்துவிட்டான் எனச் சொல்லிச் சொல்லி மாய்ந்துபோனார் . ஒரு கட்டத்தில் கடுப்பான பாட்டி “இது உங்களுக்கே கொஞ்சம் ஓவரா இல்ல ?“ என அடக்கினார்.
அவருள் சொல்ல முடியாது ஆனந்த ஊற்று பீறிட்டு எழுந்தது. அந்த அழகிய நொடி அவர் இதயத்தில் ஆழமாய் பதிந்தது. அன்று முதல் தனுஷ் அவர் வாழக்கையில் எல்லாமாகிவிட்டான்.
அவன் தன் பிஞ்சு பாதங்களால் எடுத்த வைத்த முதல் அடி தாத்தாவோடு . . .
அவன் பேசிய முதல் மழலைச் சொல் தாத்தா.. . .
அவனின் முதல் முத்தம் தாத்தாவிற்கே
இன்று தாத்தாவிற்கு மட்டற்ற மகிழ்ச்சி. ஆம் தன் பேரனுக்குத் திருமணம் நிச்சயமாகிவிட்டது. இருக்காதா சந்தோஷம்?
“அக்காக்கும் பிடிச்சிருக்காம்” என்ற சௌமியின் சொற்கள் அனைவர் உள்ளத்திலும் உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் அள்ளித் தெளித்தது.
உடனே தாத்தா தன் குடும்ப ஜோதிடருக்கு இருவரின் ஜாதகத்தையும் வாட்சப்பில் அனுப்பி