தந்தை விளையாடி பார்த்திருந்ததால் மைத்தி அளவிற்கு அதிசயப்படவில்லை...
“மைத்திக்கா ஏன் போன வாரம் விளையாட வரலை... உனக்கு ஏதோ உடம்பு சரியில்லைன்னு சீனு அண்ணா சொன்னார்... பத்ரி அண்ணாவும் வரலை....”
“ஆமாம் துளசி... வயத்த வலி... அடுத்த வாரம் வந்துடுவேன்... நாம இந்த புது பந்துல விளையாடலாம்...”
“இதுல விளையாடனும்ன்னா பாட் எல்லாம் போட்டுக்கணும் அக்கா... இல்லைன்னா அடிப்பட்டா பயங்கரமா வலிக்கும்....”, துளசி சொல்ல. அப்பொழுது, தான் இந்த பந்தில் விளையாடவே முடியாதா என்று சோகத்தில் ஆழ்ந்தாள் மைத்தி...
“அச்சோ ஏன் உடனே சோகமாகுற... நான் ரெண்டு, மூணு பாவாடை சேர்த்து கட்டிட்டு வரேன்... பட்டாலும் ரொம்ப வலிக்காது... என்ன சொல்ற...”
“நீ பாவாடை போட்டுப்ப அதனால ரெண்டு மூணு கட்டிக்கலாம்.... சீனுண்ணா, பத்ரிண்ணா லாம் எப்படி ரெண்டு, மூணு பாண்ட் போட்டுப்பா...”
“அவங்களுக்கு ரப்பர் பந்து போடு... எனக்கு மட்டும் கார்க் பந்து போடு... கம்மியா போட்டா நிறைய தேயாம புதுசாவே இருக்கும் இல்லை...”, ஐடியா மன்னியாக துளசி சொல்ல, மைத்தி உடனே சந்தோஷத்துடன் தலையாட்டிவிட்டாள்....
“நீங்க என்ன விஷயமா பார்க்கனும்ன்னு சொன்னேள்....”, அனந்து கேட்க...
“நான் கடந்த ரெண்டு, மூணு மாசமா உங்க பொண்ணு கிரிக்கெட் விளையாடறதை தொடர்ந்து பார்த்துட்டு வரேன்.... ரொம்ப நல்லா பௌலிங் போடறா... தொடர்ந்து பயிற்சி எடுத்தா மிகச் சிறந்த கிரிக்கெட் ப்ளேயரா வர்ற வாய்ப்பு இருக்கு... என்னோட பொண்ணும் அவங்களோட சேர்ந்துதான் விளையாடறா... ஸோ ரெண்டு பேரையும் நல்ல கிரிக்கெட் அகாடமில சேர்த்து விட உங்கக்கிட்ட கேட்கலாம்ன்னு வந்தேன்...”, கண்ணன் கூற...
“அதெல்லாம் குடும்பத்துக்கு ஒத்து வராது... அவ படிச்சு ஒரு வேலைக்கு போனா போறும்... இல்லையா அது கூட வேண்டாம்... நல்ல இடமா பார்த்து கல்யாணம் பண்ணிக் கொடுத்துடுவோம்.... பெரியவளாயாச்சு... இனிமேலாம் அவ விளையாட வர மாட்டா...”, கற்பகம் பாட்டி சற்று குரல் உயர்த்தி கூற, அங்கு பின் விழுந்தால் கூட கேட்கும் அமைதி உருவாகியது... அந்த அமைதியில் மைத்தியின் விசும்பல் சத்தம் லேசாக கேட்க ஆரம்பித்தது....
தொடரும்
Next episode will be published on 8th July. This series is updated weekly on Wednesday mornings.