வாங்கிக்கொண்டு போய், நம் தோட்டத்தில் நடணும், என்றெல்லாம் எதிர்காலத்துக்கும் தாவி, கண் எதிரே உள்ள மலரின் அழகை ரசிக்க விடாது!
ஏன் தெரியுமா? ஒரு வினாடி மலரின் அழகை ரசித்ததும், அந்த ரசிக்கிற அனுபவத்தை தொடர்ந்து உணர, அதை ரசித்துக்கொண்டே, மனதை ஓட ஓட விரட்டி, அது இருந்த இடத்தை சூன்யமாக்கி, நிகழ்காலம் முழுமையாக ஆக்கிரமித்துக் கொள்ளும்.
அதுதான், அந்த நிகழ்காலம்தான், இறைவன்! அதனால்தான், வெளியே தேடாதே இறைவனை, உன் உள்ளேயே உள்ளான், என்றார்கள், பெரியவர்கள்!
அந்த சர்வ சக்தி படைத்த இறைவனே நமக்குள்ளே இருந்து நம்மை காக்கும்போது, நமக்கு எதுவும், எவரும், தேவையே இல்லை. எல்லாம் இறைவன் கவனித்துக் கொள்வான் என்னும் நம்பிக்கை மட்டும் தொடர்ந்து இருக்கவேண்டும்.
எல்லோரும் நல்லா இருக்கணும்னு நினைப்பதைத் தவிர, வேறொன்றும் அறியேன் பராபரமே!"
சுவாமிகள் பிரசங்கத்தை முடித்துக் கொண்டார்.
தொடரும்...
Next episode will be published on 14th July. This series is updated weekly on Tuesday mornings.