தொடர்கதை - இளகி இணையும் இரு இதயங்கள் - 09 - சசிரேகா
விடிந்தது
காலையில் உற்சாகமாக எழுந்தான் யுவராஜன். இதற்கு முன்பு எப்போதும் இந்தளவு சந்தோஷமாக இருந்ததில்லை அவன், இப்போது எழுந்த உடனே அஞ்சலியின் நினைப்பு வர உடனே அவளைப் பார்க்க வேண்டும், பேச வேண்டும் என தோன்றி தனது செல்போன் தேடி அதில் இருந்து அஞ்சலிக்கு போன் செய்தான் உற்சாகமாக அதுவோ சுவிட்ச் ஆப் என வரவே அவனின் முகம் சுருங்கியது
”ஏன்” என கேட்டபடியே மீண்டும் முயற்சி செய்தான். அதே சுவிட்ச் ஆப் என வரவே அவனது உற்சாகம் இப்போது ஓடியேவிட்டது. சோர்வாக உணர்ந்தான் மீண்டும் படுக்கையில் படுத்து விட்டத்தைப் பார்த்தான்.
”என்னாச்சி அஞ்சலிக்கு” என தன்னையே கேட்டுக் கொண்டான். கண்கள்
...
This story is now available on Chillzee KiMo.
...
ம் சார்” என சொல்ல யுவனோ பலமாக யோசித்தான்.
”ஒரு பக்கம் அஞ்சலியை பார்க்க முடியலையேங்கற கவலை இன்னொரு பக்கம் புதுசா ஆரம்பிக்கப் போற கடையோட பிரச்சனை, இப்ப இந்த ரெண்டுல எதை நாம சால்வ் பண்றது.