வீராங்கனையா வர ஒத்துப்பா....”
“பாட்டி மொதல்ல இன்னைக்கு சமாச்சாரத்தை பார்க்கலாம் பாட்டி இன்னும் ஒரு பத்து வருஷம் கழிச்சு நடக்கப்போறத பத்தி எதுக்கு இப்போவே கவலைப்படறேள்....”, பாட்டிக்கும், பேரனுக்கும் இடையில் காரசார விவாதம் நடக்க நடுவில் புகுந்தார் தாத்தா....
“ரெண்டு பேரும் மாத்தி மாத்தி பேசறத நிறுத்துங்கோ... ரகு நீ பேசறதெல்லாம் இப்போ கேட்க நன்னா இருக்கும்....இன்னும் பத்து வருஷம் போனாத்தான் அச்சோ நாமா இப்படி நடைமுறைக்கு சாத்தியம் இல்லாதத எல்லாம் பேசினோம்ன்னு தோணும்.... உனக்கு பிடிச்ச சயின்ஸ் விட்டுட்டு ஏன் காமர்ஸ் குரூப் படிச்ச.... முடிச்ச உடனே வேலை கிடைக்கும்ன்னுதானே.... நம்ம குடும்ப நிலை அதுதான்.... எதை பண்ணினா அடுத்து உடனே வேலை கிடைச்சு வாழ்க்கைல முன்னேற முடியும்ன்னு யோசிக்கறது மட்டும்தான்... உங்க அத்தையும், அத்திம்பேரும் சம்பாதிக்கறது இவா ரெண்டு பேரையும் படிக்க வச்சு குடும்பத்தை நடத்தவே சரியா போறது... இதுல எங்க இருந்து கிளாஸ் எல்லாம் சேர்க்கறது ரகு... அதுவும் ஒரு உபயோகமும் இல்லாத கிளாஸ்....”
“தாத்தா இப்போ பணம்தான் பிரச்சனையா.... நன்னா விளையாடற பசங்களுக்கு ஸ்கூல்ல கொடுக்கறா மாதிரியே ஸ்காலர்ஷிப் தருவா தாத்தா... நான் விசாரிச்சு பார்க்கறேன்.... அப்படி இல்லாட்டாலும் இன்னும் ரெண்டு வருஷம்.... காலேஜ் முடிச்சுட்டு நானும் சம்பாதிக்க ஆரம்பிச்சுடுவேன்.... அப்பறம் நானே அவளுக்கு பீஸ் கட்டிடுவேன்....”
“நீ பேசறத கேக்க சந்தோஷமா இருக்கு ரகு... உன் கூட பொறக்காட்டாலும் அவளுக்காக நீ இத்தனை தூரம் பேசறது... ஆனா இதெல்லாம் சரிப்பட்டு வராது... அதனால இத்தோட எல்லாத்தையும் மறந்துட்டு வேலையைப் பாருங்கோ...”
ரகுவும், பத்ரியும் தனக்காக தாத்தா பாட்டியிடம் போராடுவதை கண்களில் நீருடன் பார்த்துக் கொண்டிருந்தாள் மைத்தி.... ரகு அத்தனை தூரம் பேசியும் தாத்தாவிடம் ஒன்றும் வேலைக்காகாமல் போக அவளின் கண்ணீர் , கண்களைத் தாண்டி பொழிய ஆரம்பித்தது...
“தாத்தா ப்ளீஸ் தாத்தா... என்னை விளையாட விடுங்கோ... நான் நன்னா பால் போடறேன்னு இன்னைக்கு வந்த கோச் சொன்னார்... எனக்கு மிகப் பிரகாசமான எதிர்காலம் இருக்குன்னு சொன்னார் தாத்தா... அதெல்லாத்தையும் விட எனக்கு கிரிக்கெட் விளையாட ரொம்ப பிடிச்சிருக்கு தாத்தா.... விளையாட போறதுனால படிக்காமல்லாம் இருக்க மாட்டேன்... நல்லபடியா படிக்கவும் செய்வேன்....”, தானே களத்தில் போராட இறங்கினாள் மைத்தி.... அந்தோ பரிதாபம் இறங்கிய வேகத்திலயே வாயை விட்டாள்....
“நீ பந்து நன்னா போடறதை அவர் எப்போ பார்த்தார்....”, தாத்தா கேட்க, தான் உளறியதை