“அதெல்லாம் கொஞ்ச நாள்ல சரியாப் போய்டும் அத்திம்பேர்... நாளைக்கே மைத்தி பெரிய ஆளா வந்தா என் பேத்தியாக்கும்ன்னு பீத்திண்டு நடப்பார்....”
“பெரியவாளை கிண்டல் பண்ணாத பத்ரி.... அவர் சொன்னது எதுவும் தப்பில்லை... எது எதார்த்தமோ அதைத்தான் சொல்றார்... பார்ப்போம் நாளைக்கு அண்டத அகாடமில என்ன சொல்றான்னு... நம்மளால கொடுக்க முடிஞ்ச பீஸா இருந்தா சந்தோஷம்தான்....”
“அத்திம்பேர் கவலைப்படாதீங்கோ... சாயங்காலத்துல ஏதானும் பார்ட் டைம் வேலைக்கு போகலாம்ன்னு இருக்கேன்... அதுல வர்ற பணத்துல கூட மைத்தியை சேர்க்கலாம்... அதனால பணத்தை ஒரு பெரிய விஷயமா எடுத்துக்காதீங்கோ....”
“அதெல்லாம் வேண்டாம்டா ரகு... படிக்கற வேலையை மட்டும் பாரு.... இன்னும் ரெண்டு ரெண்டு வருஷம்... அப்பறம் வேலைக்கு போய்க்கலாம்....”
“இல்லை அத்திம்பேர்... நான் படிக்கற லைன்லையேதான் தேடறேன்... கொஞ்சம் எக்ஸ்பீரியன்ஸ் கிடைக்கும் இல்லை... அப்படியே கவெர்ன்மென்ட் வேலைக்கும் பரிட்சை எழுத ஆரம்பிக்கலாம்ன்னு இருக்கேன்.... படிச்சு முடிக்கறதுக்குள்ள ஏதானும் ஒரு வேலை கிடைச்சுடணும்....”
“சந்தோஷம்டா ரகு... நீ ஸ்திரமா ஒரு வேலைல உட்கார்ந்துட்டேனா உங்கப்பாக்கு கொஞ்சம் நிம்மதியா இருக்கும்... சரி அந்த கண்ணன் சார் என்ன சொன்னார்....”
“அத்திம்பேர் அவரோட போன் நம்பர் கொடுத்திருக்கார்... இதுதான் அது...”, பத்ரி கண்ணனின் அலுவலக கார்டை அனந்துவிடம் கொடுத்தான்...
“சரிடா நான் நாளைக்கு அவரண்ட பேசிட்டு சொல்றேன்... அப்பறமா நாம நேர்ல போய் அந்த அகாடமில விஜாரிக்கலாம்...”, அனந்து கூற பத்ரியும், ரகுவும் மகிழ்ச்சியுடன் கீழே சென்றனர்....
சொன்னபடியே கண்ணனிடம் மறுநாள் அனந்து பேச, இருவரும் சேர்ந்து அந்த அகாடமிக்கு நேரில் சென்று பார்த்து இதர விஷயங்களை கேட்டறிந்தனர்... ரகுவும் கல்லூரியிலிருந்து நேரடியாக அங்கு வந்திருந்தான்...
பணம்தான் சற்று அதிகப்படியாக இருக்க அனந்துவிற்கு தன்னால் தொடர்ந்து கட்ட முடியுமா என்ற தயக்கம் இருந்தது... ரகுவும். காமாட்சி பாட்டியும் பேசி அவரைக் கரைத்து ஒரு வழியாக அவரை ஒத்துக்கொள்ள வைத்தனர்.... காமாட்சி பாட்டியே தாத்தா பாட்டியிடம் பேசி சம்மதம் வாங்கினார்....
அனைத்து வேலைகளையும் முடித்து பணத்தைக் கட்டி ஒரு சுபயோகத் திருநாளில் அனைவரின் ஆசியுடன் மைத்தி அந்த அகாடமி வாயிலுள் காலை வைத்தாள்....
தொடரும்
Next episode will be published on 29th July. This series is updated weekly on Wednesday mornings.