தொடர்கதை - பிரியமானவளே - 09 - அமுதினி
எனக்கொரு சினேகிதி சினேகிதி தென்றல் மாதிரி
நீ ஒரு பௌர்னமி பௌர்னமி பேசும் பைங்கிளி
"ராம், எப்படி இப்படி திடிர்னு ஒரே நேரத்துல ரெண்டு பேருக்கும் கல்யாணம் ஆச்சு? அதுவும் சிஸ்டர்ஸ் ரெண்டு பேரையும்?? த்ரீ மந்த்ஸ் முன்னாடி நான் போகும் போது கூட மேரேஜ் ரிலேட்டேடா எந்த பேச்சும் நடக்கலையே??? த்ரீ மந்த்ஸ்ல லவ் அண்ட் மேரேஜ்ன்னு சொல்லிடாதீங்க...சினிமால கூட நடக்காது...எப்படி தமிழ் பெமிலியை உங்களுக்கு தெரியும்???" டிவி பார்த்து கொண்டிருந்த ராமின் அருகே அமர்ந்திருந்த நித்யா கேட்டாள்.
"ஹாஹாஹா இவ்ளோ கேள்வியா???? ஹ்ம்ம்ம்....என்ன சொல்றது????" என்று தாடையை தடவியவன் "தமிழ் இங்க தான் ஒர்க் பண்ணுனா. பாட்டிக்கு அவளை ரொம்ப பிடிச்சு போய்டுச்சு..." ராம் சொல்ல, "ஆனாலும் அதுக்காக இவ்ளோ சடென்னா மேரேஜ் வெக்க வேண்டிய அவசரம் என்ன? நம்ம ரிலேட்டிவ்ஸ் நெறய பெரு வரல...எனக்கு கூட சொல்லல..."நித்யா முகத்தை தூக்கி வைத்து கொண்டாள்.
"நித்து, சாரி. எனக்கு தெரியும். நீ எவ்ளோ ஏமாற்றம் அடைஞ்சிருப்பேன்னு...."ராம் மன்னிப்பு கோர, "ஹ்ம்ம் டிஸ்அப்பாயிண்ட்மெண்ட் தான்...ரொம்பவே...."அவள் முகத்தில் அந்த நிமிடம் தோன்றிய பாவங்களை ராம் கவனிக்கவில்லை. அதற்க்கு முன் முகத்தை மாற்றியவள் "பரவால்லை ராம். ஆனா உங்களுக்கு உங்க பிஸிநெஸ்ல உங்களுக்கு ஹெல்ப் பண்றமாதிரி வெல் எஜுகேட்டேட் பொண்ணு தான் வேணும்னு சொன்னிங்களே. அதுவும் உங்க வைப் மாடல் மாதிரி இருக்கணும்னு சொல்லுவிங்களே....அப்பறம் எப்படி தமிழ்??? எனக்கு புரியல... ஷி இஸ் பியூடிபியுல்...ஆனா நீங்க எதிர்பார்த்தமாதிரி இல்லையே..." நித்யா ராமின் முகத்தை ஆராய்ந்தபடி கேட்டாள்.
ராம் பதில் சொல்லாமல் சிரிக்க, "ராம் சிரிக்காதிங்க. சீரியஸா கேட்கறேன். நீங்க இஷ்டப்பட்டு தான் கல்யாணம் பண்ணிக்கிட்டிங்களா?" நித்யாவின் குரலில் இப்போது சிறிது கோபம் இருந்தது.
"நான் என்ன குழந்தையா??? என் கையை பிடிச்சு வலுக்கட்டாயமா தாலி கட்ட வைக்க?? உன் கேள்வி ரொம்ப சில்லியா இருக்கு. போ போயி ரெஸ்ட் எடு. நாளைக்கு எங்கயோ வெளிய போகணும்னு சொன்னியே" என அவள் தலையில் தட்டியவன் அங்கிருந்து எழுந்து சென்றான் அவள் அடுத்த கேள்வி கேட்கும் முன்.
அவன் போவதையே பார்த்தபடி அமர்ந்த நித்யா, அவன் சொன்னதையே திரும்பவும் யோசித்தாள்.
"நான் விரும்பி தான் கல்யாணம் பண்ணிக்கிட்டிங்களானு கேட்டேன்...ஆமானும் சொல்லல