....
"வேண்டாம் நீத்து...எல்லாம் முடிஞ்சு போய்டுச்சு...இனி அங்க இருந்து என்ன பண்ண போற? ப்ளீஸ் டா..." மீனாட்சி குரல் அழுகையோடு ஒலிக்க , "அம்மா நான் ஒரு முடிவெடுத்தன அதுல இருந்து என்னைக்கும் மாறமாட்டேன்னு உங்களுக்கு நல்லா தெரியும். எப்பவுமே ராம் கூடவே இருக்கணும்னு தான் பேஷன் டிசைனிங் படிச்சேன். ராமுக்கு நல்ல மாடில மாதிரி இருக்கற பொண்ணு தான் வேணும்னு சொன்னப்போ ராமக்காக பட்டினி இருந்து, எக்ஸர்சைஸ் அது இதுனு எவ்ளோ கஷ்டப்பட்டு வெயிட்டை குறைச்சேன். எனக்கு எல்லாமே ராம் தான்மா. என்னால ராம் இல்லாம வாழ முடியாது" நித்யாவின் குரல் வெறியுடன் ஒலிக்க "ஐயோ நீத்து இப்போ ராமுக்கு கல்யாணம் ஆயிடுச்சு... அவன் இன்னொரு பெண்ணுடைய ஹஸ்பண்ட். என் பொண்ணு இன்னொரு பெண்ணுடைய வாழ்க்கையை அழிக்க கூடாதுடா. ப்ளீஸ் டா...." மீனாட்சி கெஞ்ச, "அம்மா என் வாழ்க்கையை தான் அவ அழிச்சிட்டு என் ராம் கூட வாழ்ந்திட்டு இருக்கா. நீங்க உளறாதிங்க...." நித்யா கத்த "நித்து சொன்னா கேளு... இல்லைனா நான் எல்லா விஷயத்தையும் அத்தைகிட்ட சொல்லிடுவேன்...." மீனாட்சி மிரட்டலாக சொல்ல, "சொல்லுங்க தாராளமா சொல்லுங்க. அதுக்கு அப்பறம் இந்த நித்யாவை யாரும் பார்க்க மாட்டிங்க..." என்றவள் கையில் இருந்த போனை சுவற்றில் விட்டெறிய அது உடைந்து தெறித்தது.
மறுமுனையில் மீனாட்சி இடிந்து போய் அமர்ந்தார் கலக்கத்துடன் தன்னுடைய பெண்ணை மீட்கும் வழி தெரியாமல்.
தொடரும்
Next episode will be published on 1st Aug. This series is updated weekly on Saturday mornings.