(Reading time: 10 - 20 minutes)
Kanavu Meippadum
Kanavu Meippadum

“ஏதானும் நடக்கணும் சார்... அடுத்து வர்ற போட்டிகள்லயும் இதே மாதிரி இவங்களை உக்கார வச்சாங்கன்னா , ரெண்டு பேரும் மொத்தமா இந்த அகாடமியே  வேண்டாம்ங்கற முடிவுக்கு வந்துடுவாங்க...”

“பார்க்கலாம் ரகு... நான் இந்த வாரத்துல ஒரு நாள் அவங்க கோச் பார்த்து பேசலாம்ன்னு இருக்கேன்... நீங்களும் வர்றீங்களா...”

“காலேஜ் முடிச்சுட்டு அப்படியே வேலைக்கு போறேன் சார்... அதனால எனக்கு வர்றது கஷ்டம்... கார்த்தால இன்ஸ்டிடியூட்ல வேலை செய்யறேன்... அப்பவும் வர முடியாது...”

“ஓ பரவாயில்லை விடுங்க... நான் போய் பேசிட்டு உங்களுக்கு சொல்லுறேன்...”, இருவரும் பேசியபடியே சென்று அனைவருக்கும் ஐஸ் வாங்கிக்கொண்டு வந்தனர்...

மைத்தியும் ஓரளவிற்கு தன்னைத் தேற்றிக்கொண்டு சகஜ நிலைக்கு திரும்பினாள்...

கண்ணன் சென்று பயிற்றுவிப்பாளருடன் பேச அவரும் தன்னால் முடிந்த அளவில் இவர்களுக்கு வாய்ப்பளிப்பதாக கூறினார்....

மைத்தி, மற்றும் துளசியின் பயிற்சியும் தொடர்ந்தது.... நடுநடுவில் சிறு சிறு போட்டிகளில் இருவரும் விளையாடினர்....

இருவரின் ஆண்டு இறுதி தேர்வுகளையும் நல்ல முறையில் எழுதி அடுத்த வகுப்பிற்கு போயினர்....

ரகுவும் கல்லூரி முடித்து அரசாங்க தேர்வுகள் எழுத ஆரம்பித்தான்... பத்ரியும், காமேஷும் பன்னிரெண்டாம் வகுப்பில் நல்ல மதிப்பெண்கள் எடுத்து தேர்வு பெற்று கல்லூரியில் சேர்ந்தார்கள்....

இந்த முறை தமிழக அளவில் இருக்கும் கிரிக்கெட் அகாடமி மற்றும் பள்ளி, கல்லூரிகள்  அனைத்துக்குமாக ஒரு போட்டி நடத்தப்பட்டது... மிக முக்கியமான போட்டி... இதில் நன்றாக விளையாடுபவர்கள் அடுத்து ரஞ்சி trophy போட்டியில் விளையாட தேர்வு செய்யப்படுவார்கள்.... அனைத்து விளையாட்டாளர்களுக்கும்  மிக முக்கியமான போட்டி....

அப்போட்டியில் விளையாட மைத்தியும், துளசியும்  தேர்வு செய்யப்பட்டனர்...

பார்ப்போம் இந்த முறையாவது மைத்தி விளையாடுகிறாளா என்று....   

தொடரும்

Next episode will be published on 12th Aug. This series is updated weekly on Wednesday mornings.

Go to Kanavu Meippadum story main page

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.