சொன்னாளே.... மேட்ச் சரியா விளையாலையா... கோச் ஏதானும் திட்டினாரா...”
“எங்களைத்தான் விளையாடவே விடலையே... அப்பறம்தானே மோசமா விளையாட....”, அழுதபடியே சொன்னாள் மைத்தி....
“என்ன சொல்ற மைத்தி....”, அவளின் கண்ணீரை துடைத்தபடியே பத்ரி கேட்டான்...
“ரெண்டு மேட்ச்லையும் என்னையும், துளசியையும் விளையாட வைக்கலை பத்ரிண்ணா ... சரி இன்னைக்கு அரையிறுதி முக்கியமான மேட்ச்... அதனால ஆட வைப்பான்னு நினைச்சோம்... ஆனா இன்னைக்கும் விளையாட விடலை.... ”
“ அது நீங்க இப்போதான் சேர்ந்திருக்கேள் இல்லையா... அதனால இருக்கும்... ரெண்டாவது இது டிஸ்ட்ரிக்ட் லெவல் மேட்ச் வேற... நிறைய எக்ஸ்பீரியன்ஸ் இருக்கறவாளைத்தான் விளையாட வைப்பா....”, பத்ரி அவளை ஆறுதல் படுத்தினான்...
“என்ன பெரிய எக்ஸ்பீரியன்ஸ்.... நிறைய பேர் சொத்தை மாதிரி ஆடினா... மீரான்னு ஒரு அக்கா... ரெண்டு மேட்ச்லையும் சேர்த்து பத்து ரன் எடுத்தா... ஃபீல்டிங்கும் படு மோசம்... அவாளை இந்த மேட்ச்லையும் செலக்ட் பண்ணி இருக்கா... அதே மாதிரி ஒரே ஓவர்ல கிட்டத்தட்ட பன்னெண்டு ரன் ஒரு பொண்ணு கொடுத்தா... ரெண்டு மேட்ச்லையும் ஒரு விக்கெட் கூட எடுக்கலை... அவளையும் திருப்பி இந்த மேட்ச்ல சேர்த்துண்டு இருக்கா... ஒரு உதாரணத்துக்குத்தான் அவா பேரை சொன்னேன்... இந்த மாதிரி நிறைய பேர் விளையாடினா.... எங்க கூடவே இன்னும் ரெண்டு அக்கா உட்கார்ந்து இருந்தா... அவாளும் பொருமிண்டுதான் இருந்தா... அந்த மீரா , மேட்ச் நடத்தறவருக்கு தெரிஞ்சவளாம்... அதனாலதான் அவ சரியா விளையாடாட்டாலும் சேர்த்துண்டு இருக்கான்னு சொல்லிண்டு இருந்தா.... ”, ஆற்றாமையில் அழுகை வெடிக்க பேசினாள் மைத்தி...
“மைத்திக் குட்டி மொதல்ல கண்ணைத் தொடை...நான் உன்கிட்ட எத்தனை தரம் சொல்லி இருக்கேன்... அழுகை எதுக்கும் தீர்வாகாதுன்னு... அது இன்னும் நம்மளை பலவீனப்படுத்துமே தவிர பலமாக்காது...”
“போண்ணா... அட்வைஸ் கொடுக்கறது ஈஸி.... நேக்கு எத்தனை கஷ்டமா இருக்கு தெரியுமா...”
“கஷ்டம்தான் மைத்தி... யார் இல்லைன்னா... ஆனா இதெல்லாம் போல்டா எதிர்கொள்ள நீ கத்துக்கணும்... உன்னோட வாழ்க்கைல இந்த மாதிரி நிறைய ஏமாற்றங்கள் வரும்... அதை நீ எப்படி கடந்து வர்றேங்கறதுலதான் உன்னோட வெற்றி இருக்கு... நான் +2-ல எடுத்த மார்க்குக்கு எனக்கு சுலபமா நான் கேட்ட குரூப் கிடைச்சிருக்கும்... ஆனா அந்த சீட்டை பணம் வாங்கிண்டு அடுத்தவாளுக்கு கொடுத்துட்டா... நானும் பணம் கொடுத்திருந்தா எனக்கும் சீட் கிடைச்சிருக்குமா இருக்கும் ... ஆனா அது தப்பில்லையா.... நினைச்சதை படிக்கறதை