மாட்டோம்ன்னு சொல்லிட்டா....”, சீனு கேட்க மைத்தியும், துளசியும் சிரித்தார்கள்...
“அப்பாடா இப்போதான் என் மகள் மூஞ்சில சிரிப்பு வருது... நேத்தெல்லாம் ஒரே அழுகாச்சிதான்.... ராத்திரி சாப்பிடக் கூட இல்லை... காலைல எழுந்தபிறகு உங்ககூட விளையாட கூட்டிட்டு போறேன்னு சொன்ன பிறகுதான் கொஞ்சம் சரியாச்சு...”
“இங்க மட்டும் என்ன சார் ... மேடமும் அப்படித்தான் இருந்தாங்க.... இன்னைக்கு பீச் மேட்ச் பத்தி சொன்னப்பறம்தான் சரியானா.... நீங்க நேத்து மேட்ச் பார்க்க போனீங்களே... ஏன் இவங்களை செலக்ட் பண்ணலையாம்... கோச் ஏதானும் சொன்னாரா....”, ரகு கேட்க, பிள்ளைகளுக்கு முன் எப்படி சொல்வதென்று சற்று தயங்கினார் கண்ணன்.... அவரின் தயக்கத்தை புரிந்துகொண்ட ரகு மேட்ச்சில் வெற்றி [பெற்றதால் தாங்கள் சென்று அனைவருக்கும் ஐஸ் வாங்கி வருவதாக கூறி அவரை அழைத்துக்கொண்டு சென்றான்....
“இப்போ சொல்லுங்க சார்... என்னாச்சு... “
“எல்லாம் போலிடிக்ஸ்தான் தம்பி... அவங்கவங்களுக்கு தெரிஞ்சவங்களுக்கு வாய்ப்பு கொடுக்கறது... அதுவும் தவிர கொஞ்சம் பெரிய இடத்துல இருக்கறவங்க காசு கொடுத்து செலக்ட் பண்ண வைக்கறது.... நேத்து அப்படித்தான் ஆகி இருக்கு... இவங்க டீம் மட்டும் இல்லை இன்னும் ரெண்டு டீம் செலேக்ஷனும் அப்படித்தான் நடந்திருக்கு...”
“இது என்ன சார் கொடுமையா இருக்கு... திறமையே இல்லாம இப்படி விளையாடினா எங்க இருந்து ஜெய்க்க முடியும்... சரி இது மாவட்ட அளவிலான மேட்ச் தானே... இதுக்கே இந்த நிலமையா...”
“இந்த மேட்ச் விளையாடினா சுலபமா தமிழ்நாடு லெவல் டீம்க்கு செலக்ட் ஆக நிறைய வாய்ப்பிருக்கு.... அதுனாலதான் இப்படி குறுக்கு வழில விளையாட பார்க்குறாங்க....”
“இவங்க அரசியல்ல நல்லா விளையாடற பசங்களோட எதிர்காலம்தான் பாழாகுது....”
“ஹ்ம்ம் எனக்கும் அந்த கவலைதான் தம்பி... இவங்க கோச்கம் நேத்து ரொம்ப கோவமாத்தான் சுத்திட்டு இருந்தாரு... செலெக்ஷன் கமிட்டில அவர் இல்லை... அதனால அவரால எதுவும் பண்ண முடியாம போய்டுச்சு...”
“பாவம் யார் யாரோ விளையாடற அரசியல்ல இந்த குழந்தைங்கள் நேத்து வாடிப்போச்சு... மைத்தி கூட நேத்திக்கு எங்கிட்ட சொன்னா.... நான்தான் நம்பலை...”
“நேத்து தோத்து போனது, அதோட கூட மூணு போட்டிலையும் சரியா விளையாடாதது இதெல்லாத்தையும் வச்சு இவங்களோட செலெக்ஷன் எவ்ளோ தப்புன்னு கோச் பேசப்போறேன்னு சொல்லி இருக்காரு... பார்ப்போம்... அதுக்கு ஏதாவது மதிப்பு இருக்குதான்னு.....”