மனதில் மாபெரும் அழற்ச்சி!
"இல்லை வேணாம்ணா! இப்போ தான் யோசிக்கிறேன். எனக்கு அந்தப் பொண்ணு மேலே லவ் எல்லாம் இல்லை. பார்த்ததும் பிடித்திருந்தது அவ்வளவுத்தான்!" மனதினை காயப்படுத்திக் கொண்டு அவ்வார்த்தைகளைக் கூறினான் அவன். தன் கடந்தக்காலம் அவள்தம் எதிர்காலத்தினைப் பாதிக்கக் கூடாது என்ற எண்ணம் அவனுடையது! ஆதித்யாவின் தீர்க்கமானப் பார்வை அவனை ஆழமாகத் துளைத்தெடுத்தது.
"உங்க இரண்டுப் பேருக்கும் கல்யாணம் ஆகி அதுக்கு அப்பறம் உன் கடந்தக்காலம் உனக்குத் தெரிந்திருந்தால் அந்தப் பொண்ணை அப்படியே விட்டுவிட்டுப் போயிருப்பியா?" பதிலே அளிக்க இயலாத ஓர் வினாவினை முன் வைத்தான் அதித்யா. ஒரே வினாவில் அவனது மனதிலான அனைத்து சலனங்களும் ஸ்தம்பித்துப் போக, விடையற்றவனாய் நொடிந்துப் போனான் இளையவன்.
"காதல், கல்யாணம் எல்லாம் அழகானப் பந்தம் உதய்! நாம போகும் போது எதையும் எடுத்துட்டுப் போகப் போறதில்லை. இருக்குற வரைக்கும் எல்லாரையும் சந்தோஷமா வைத்துப்போம்! நாங்க ஒண்ணும் கங்காத் தான் உன் மனைவின்னு சொல்ல வரலை. அவளுக்கு உன்னைப் பிடிக்கலைன்னா வேற வழியே இல்லை கல்யாணம் எல்லாம் கற்பனைத்தான்! உன்னை கஷ்டப்படுத்திட்டு இருக்குற விஷயத்தை அவக்கிட்ட சொல்லு, அவ முழு மனதோட உன்னை ஏற்றுக் கொண்டால் சரி! இல்லைன்னா, உன் விருப்பம்!" நடந்த விஷயத்துல ஒரு வகையில பாதிக்கப்பட்டது நானும் தான்! அப்பா செய்த தவறை நானும் நியாயப்படுத்திக்க விரும்பலை. ஆனா, மாயா என்னை ஏற்றுக்கொள்ளவில்லையா?" இயன்றவரை அவன் மனதினை சலவை செய்துத் தூய்மைப்படுத்தினான் தமையன்.
"அண்ணி வேறண்ணா! அவங்களை சின்ன வயசுல இருந்தே தெரியும்!" இளையவனும் விடுவதாகவே இல்லை.
"உதய் ஒரு விஷயம் புரிந்துக்கொள்! தெரிந்துக்கிட்டு வர காதலை விட, புரிந்து வர காதல் அழகானது, சக்தி வாய்ந்தது. நீ மட்டும் முடிவு எடுத்தா போதாது, உன்கூடவே கடைசி வரை வரப்போறவங்களும் முடிவு எடுக்கணும்! அதை கங்காவிடமே விட்டுவிடு! அவ்வளவுத் தான் என்னால சொல்ல முடியும்! நான் கிளம்புறேன், நல்லா யோசித்து ஒரு முடிவை எடுத்துட்டு அப்பறமா வீட்டுக்கு வா!" என்று அறிவுரை வழங்கியவனாய் எழுந்து நடந்தான் ஆதித்யா. பெரியவன் காட்டிய வழி அவனைத் தெளிவுப்படுத்தியதோ இல்லையோ, நேர்வழிப்படுத்த செய்தது!
தொடரும்!
Next episode will be published as soon as the writer shares her next episode.
Go to Nenjil thunivirunthaal story main page
{kunena_discuss:1163}