“எங்க வீட்டு கடைக்குட்டிக்கு செல்லம் ஜாஸ்தி” தாத்தா மூர்த்திடம் சிரித்தபடி சொல்ல
“சாப்பிட ஸ்னாக்ஸ் வாங்கிட்டு வரேன் இரு” தனுஷ் அவசரமாய் கிளம்ப
“இருங்க மாப்பிள்ளை நான் வாங்கிட்டு வரேன்” மூர்த்தி கிளம்பினான் கூடவே “நானும் வரேன்” என சஞ்சயும் அவர்களுடன் கிளம்பிவிட்டான்.
பிருந்தாவின் இடப்பக்கத்தில் கண்ணாடி இருந்தது. அவளின் அம்மா சாவித்ரி கொடுத்த புடவையை தன் மேல் போட்டு பார்த்தாள் அப்படியே கண்ணாடி பார்த்து புடவை சரி செய்தாள்.
“உனக்கு பொருத்தமா இருக்கு பிருந்தா” தனுஷ் அம்மா சாந்தி சொன்னார். மற்றவரும் அதையே சொல்ல . . . அப்போதுதான் கண்ணாடி வழியே ஒருவன் தன்னையே பார்ப்பதை கவனித்தாள்.
அவனை கண்டதும் ரத்தமே உறைந்தது. அமிலத்தை மிதித்தது போல மனம் எரிந்தது. முடிந்தது எல்லாம் முடிந்தது இனி தப்ப வழியே இல்லை என மனம் பதைபதைத்தது. தன் உணர்வுகளை கட்டுப்படுத்த பெரும்பாடுபட்டாள். இதயம் பலமிழந்தது. அவளின் அத்தனை மகிழ்ச்சியும் நீர்த்துப்போனது. அம்மா சாவித்திரியும் அவனை கண்டுக் கொண்டாள்.
அவன் அவளை நோக்கி நடக்க தொடங்கினான். அவன் அருகே மனைவி அஞ்சலி. அவன் முகத்தில் பல காலத்திற்கு பிறகு சந்திக்கும் ஆவல் நன்கு புலப்பட்டது.
பிருந்தா அங்கிருந்து தப்பிக்க என்ன வழி என சுற்றி பார்த்தாள் ஒன்றும் புலப்படவில்லை. கால்கள் சிலை போல அசைய மறுத்தன.
வானவில் வளையும் . . .