"இந்த ரூம் நான் வரும்போது எப்படி இருந்துச்சோ அப்படியே இருக்கு. எந்த சேஞ்சும் இல்லை. எனக்கு பிடிக்கும்னு தான் இந்த ரூம்க்கு ப்ளூ கலர்ல பெய்ண்டிங்கே பண்ணுனாங்க. இந்த கர்டெய்ன்ஸ் கூட என்னோட செலெக்ஷன் தான். இந்த பால்ஸ் சீலிங் கூட நான் சூஸ் பண்ணுனது தான். கல்யாணத்துக்கு அப்பறம் உன் டேஸ்ட்க்கு எதையும் மாத்தல போல?" வந்ததில் இருந்து நித்யா எப்போதும் தன்னை சற்று கீழ்த்தரமாகவே நடத்துவது புரிந்திருந்தது தமிழ்செல்விக்கு. அதனாலேயே அவளின் இந்த பேச்சின் நோக்கம் என்னவாக இருக்கும் என புரிந்தது தமிழ்செல்விக்கு.
"இதுல எந்த சேஞ்சும் பண்ணனும்னு எனக்கு தோணல அதனால நான் கேக்கல" தமிழ்செல்வி அதே புன்னகையுடன் பதில் சொல்ல, "எனக்கு புடிச்சதே தான் உனக்கும் பிடிச்சிருக்கு. இல்லையா???" நித்யாவின் முகத்தில் இருந்த புன்னகை மறைந்திருந்தது. அவள் அந்த அறையை சொல்கிறாளா இல்லை வேறு எதையோ மறைத்து பேசுகிறாளா என ஒரு முறை அவளை கூர்ந்து பார்த்தாள் தமிழ்செல்வி.
அவளின் பார்வையை சந்தித்த நித்யா தமிழ் அருகே வந்து நின்றாள்.
"எனக்கு ஒரு விஷயம் புரியவே இல்லை தமிழ்..." என்றபடி அவளுக்கு எதிரே இருந்த இருக்கையில் கால் மேல் கால் போட்டு அமர்ந்தவள், "ஒருத்தரை ஒருத்தர் பிடிக்காம எதுக்கு நீயும் ராமும் கல்யாணம் பண்ணிக்கிட்டிங்க? ஐ ரியலி டோன்ட் அன்டெர்ஸ்டெண்ட்" நித்யாவின் கேள்வியில் தமிழின் முகத்தில் ஒரு நொடி அதிர்ச்சி வந்து சென்றது. அனால் அந்த நொடிப்பொழுதையும் தவறவிடாமல் கவனித்திருந்தாள் நித்யா.
மெல்ல சிரித்த தமிழ்செல்வி "எனக்கு மெடிசின் சாப்பிட்டு தூக்கம் வருது நித்யா. உன்னோட விளையாட்டு கேள்விக்கு எல்லாம் என்னால பதில் சொல்ல முடியாது" சொல்லவும், இருக்கையில் இருந்து எழுந்த நித்யா, "ராம் தான் சொன்னாரு ஒருத்தரை ஒருத்தர் பிடிக்காம தான் கல்யாணம் பண்ணிகிட்டோம்னு. அதான் கேட்டேன். எனக்கு மனசுல ஒன்னை வெச்சுக்கிட்டு வெளியே வேற மாதிரி பேச தெரியாது யு சி...எனிவே டேக் ரெஸ்ட்" என்றபடி அந்த அறையை விட்டு வெளியே வந்தவள் "தேங்க்ஸ் டு பரத். நீ மட்டும் ஆபீஸ்ல ராம்கிட்ட பேசாம இருந்திருந்தா எனக்கு இப்படி ஒரு பாயிண்டே கெடைச்சிருக்காது. இனி எப்படி தூங்கறேன்னு பாக்கலாம் தமிழ்???" என்றபடி தன்னுடைய அறைக்குள் சென்றாள்.
அங்கிருந்து போபவளையே பார்த்து கொண்டிருந்த தமிழ்செல்விக்கு சிரிப்பதா அழுவதா என தெரியவில்லை. பாட்டிக்கு வேண்டி தான் தன்னை அவன் கவனித்து கொள்கிறான் என திரும்ப திரும்ப மனதில் உருப்போட்டாலும் "அவன் விரும்பி தான் இதை எல்லாம் செய்கிறான்" என ஒரு எதிர்பார்ப்பா, ஆசையா, ஏக்கமா ஏதோ ஒன்று அவள் மனதின் ஓரத்தில் இருக்கத்தான்