உணர்ந்த ராம், "பாட்டி என்னாச்சு...உடம்பு முடியலையா???" அவசரமாக கேட்க. "ராம்...செல்வி எங்க...??அவளுக்கு போன் பண்ணுனா லைன் போகவே மாட்டேங்குது...கொஞ்சம் சீக்கிரம் போயி அவளை பாரு" விசாலம் குரலில் இன்னும் அந்த பதற்றம் தணியவில்லை.
"பாட்டி...அவ வேலை செய்துட்டு இருப்பா...நெட்ஒர்க் இல்லையா இருக்கும்...அதுக்கு எதுக்கு இவ்ளோ டென்ஷன்" ராம் சொல்லவும், "டேய்....அவ அப்பா தவறிட்டார்... இப்போ தான் போன் வந்துச்சு...அவகிட்ட சொல்ல சொல்ல கால் கட் ஆயிடுச்சு திரும்ப அடிச்ச போகலைனு எனக்கு கூப்பிட்டாங்க... போயி என்னனு பாருடா ராம்" அழுகுரலில் விசாலம் சொல்ல, "அப்பாவா....!!!!" புரியாத குரலில் ராம் கேட்க, "அண்ணா என்னாச்சு..."என்று பரத் ராமின் தோளை குலுக்கவும் "தமிழ்...அப்பா...அப்பாவா????" அவன் பரத்தின் முகத்தை குழப்பமாக பார்க்க, "அண்ணியோட அப்பாக்கு என்னாச்சு அண்ணா?" பரத் மீண்டும் கேட்கவும் "அவரு இறந்துட்டாருனு பாட்டி சொல்ராங்க" இன்னும் குழப்பம் தீராமல் ராம் முணுமுணுப்பாக சொல்ல, "ஓ காட்" பரத் முகத்தில் கவலை இருந்ததே தவிர குழப்பம் இருக்கவில்லை என்பதை உணர்ந்த ராம், அவனையே பார்க்க, அதை உணராத பரத் "வாண்ணா அண்ணி ரூம்க்கு போலாம்" என அவனையும் கையை பிடித்து இழுத்து கொண்டு அவள் அறையை நோக்கி ஓடினான்.
அவளின் அறைக்கதவை திறந்து இருவரும் நுழைகையில் அங்கே அருந்த கொடி போல கீழே விழுந்து கிடந்தவளை ஓடி சென்று எடுத்து மடியில் போட்டான் ராம். பரத் ஓடி சென்று தண்ணீர் கொண்டு வந்தவன் அதை தமிழ்செல்வியின் முகத்தில் தெளிக்க மெல்ல கண்களை திறந்தவள் கண்களில் இருந்து கண்ணீர் கொட்டியது.
"ரா..ராம்...அப்பா....அப்பா..."அவள் கேவலுக்கு இடையில் அவனை அணைத்து கொண்டு அழ, அவளை மார்போடு சேர்த்து அணைத்தவன் அவளின் தலையை மெல்லமாக வருடிவிட்டான்.
"அண்ணா நீ அண்ணியை கூட்டிட்டு கிளம்பு" பரத் சொல்லவும் அவளை கைத்தாங்கலாக தோளில் சாய்த்து கூட்டி கொண்டு வெளியே வந்தவன் அவளை காரில் அமர வைத்து விட்டு காரை வீட்டை நோக்கி வேகமாக செலுத்தினான்.
அவள் அழுததும் அணைத்து கொண்டவனுக்கு என்ன ஆறுதல் சொல்வது என புரியவில்லை. அவள் அப்பா இறந்துவிட்டார் என்றால் என்ன அர்த்தம்...அவர் இறந்து பலவருடங்கள் ஆகிவிட்டதாக தானே அவள் அம்மா சொன்னார்!!! அருகே அமர்ந்திருந்தவளை பார்த்தான். கண்களை மூடி அமர்ந்திருந்தவளின் கன்னங்கள் வழியே கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது. அவளிடம் எதை எப்படி என்னவென்று கேட்பது என புரியவில்லை.
அவர்கள் உள்ளே நுழையும்போதே கலைவாணியும் விசாலமும் வாசலில் நின்றிருந்தனர். ஓடி சென்று கலைவாணியின் மார்பில் சாய்ந்து கொண்டு அழுதவளை தேற்றியவர் "தமிழ்,