உனக்கும் மாப்பிள்ளைக்கும் பாட்டி பிளைட் டிக்கெட் புக் பண்ணிட்டாங்க. நீங்க ரெண்டு பேரும் கிளம்புங்க" எனவும் அவரை நிமிர்ந்து அதிர்ச்சியுடன் பார்த்தாள் தமிழ்செல்வி.
"செல்வி அவர் உன்னை பெற்றவர். இந்த சூழ்நிலையில் வேறு எதையும் யோசிக்கவேண்டாம். கிளம்பு" என்றவர் "மாப்பிளை பார்த்து கூட்டிட்டு போங்க" எனவும், "ராம், இங்க இருந்து கோயம்பத்தூர்க்கு டிக்கெட் போட்ருக்கு. உங்க ரெண்டு பேருக்கு வேணும்ங்கறது பேக் பண்ணி வெச்சுட்டேன். இன்னும் ஒரு மணி நேரத்துல பிளைட். சீக்கிரம் கிளம்புப்பா" எனவும் இருவரும் காரில் ஏர்போர்ட்டை நோக்கி கிளம்பினர்.
விமானத்தில் கோவையை நோக்கி கிளம்பிய ராமும் தமிழ்செல்வியும் வேறு வேறு மனநிலையில் இருந்தனர்.
யார் இவள், யார் இவளின் அப்பா...எனக்கு இவளை பற்றி ஒன்றுமே தெரியவில்லையா....அவன் யோசனையுடன் கண்களை மூடி அமர்ந்திருந்த தமிழ்செல்வியை பார்த்தான்.
தமிழ்செல்வியின் மனமோ வேதனையிலும் தவறு செய்து விட்டேனா ஒருமுறையேனும் பார்க்க முயற்சித்து இருக்கவேண்டுமா என்ற பாசபரிதவிப்பிலும் உடைந்து சிதறி கொண்டிருந்தது.
தொடரும்
Next episode will be published on 19th Sep. This series is updated weekly on Saturday mornings.