இப்போதே அவன் இழுத்த இழுப்பிற்கெல்லாம் வளைந்து கொடுக்கக்கூடாது. அப்படி மட்டும் செய்துவிட்டால் நாளை திரும்பிப்பார்க்கும்போது தன்னை தொலைத்திருப்போம் என்று அவளுக்குத் தோன்றியது.
அவன் சொன்னதைக் கேட்க வேண்டுமா? என்று அவள் மனம் முரண்டியது. அதனாலேயே அவள் அந்த மாத நாவலை வாங்கிக் கொண்டாள்.
ரஞ்சனி வீட்டு அழைப்பு மணி ஒலிக்கவே அவள் சென்று கதவைத் திறந்து பார்த்தாள்.
“ஓ. டாக்டர் சார். வாங்க வாங்க. மகாலட்சுமி இங்கேதான் இருக்காங்க. உள்ளே வாங்களேன் சார்.”
அவள் பேசுவதைக் கேட்ட பிறகு மாதவன் தான் அவளைக் கேட்கிறான் என்று புரிந்துகொண்டாள். அவள் எழுவதற்குள் தயக்கத்துடன் மாதவன் உள்ளே வந்தான்.
அப்போது ரஞ்சனியின் மகனுடன் கார்ட்டூன் பார்த்து ரசித்துக்கொண்டிருந்தாள்.
ரஞ்சனி கையோடு அவனுக்கும் பழச்சாறு கொண்டு வந்தாள். அவன் மறுத்தும் விடவில்லை.
“ஏதோ உங்க மனைவி இங்கே இருக்காங்கன்னு தெரிஞ்சதும்தான் உள்ளே வந்திருக்கீங்க. சும்மா குடிங்க டாக்டர் சார்.” என்று உரிமையோடு கொடுத்தாள்.
“என்னம்மா இப்படி பண்ணிட்டே. நான் கண்விழிச்சுப் பார்த்தால் உன்னைக் காணலை. உனக்குப் புது இடமாச்சா. எங்கே போனியோன்னு பயந்துட்டேன். சொல்லிட்டு வர வேண்டாமா?”
“நீங்க தூங்கும்போது எப்படி சொல்லிட்டு வருவாங்க.” என்று ரஞ்சனி அவளுக்காகப் பரிந்துபேசினாள்.
அவன் குடித்து முடித்ததும் எழுந்தான்.
அவளும் எழுந்தாள்.
“சரி நாங்க வர்றோம்.” என்று அவளுக்கும் சேர்த்து விடைபெற்றான். விடைபெற்ற கையோடு அவள் இடையைப் பற்றினான்.
அவள் ரஞ்சனியைப் பார்த்து தர்மசங்கடத்துடன் தலையாட்டினாள். அவளோ கண்களை சிமிட்டி குறும்பாக புன்னகைத்து அவளுக்கு விடைகொடுத்தாள்.
அவள் மனதில் என்ன ஓடிக்கொண்டிருக்கும் என்று மகாலட்சுமிக்குப் புரியத்தான் செய்தது. மற்றவர்கள் முன் காதல் மன்னனாக தன்னைக் காட்டிக்கொள்பவன் தாங்கள் தனியாக இருக்கும் போது அவளை நெருங்குவது கூட இல்லை என்பதை அவள் எப்படி வெளியில் சொல்வாள்?
கைப்பிடியிலேயே தங்கள் வீட்டிற்கு அழைத்து வந்தவன் கையோடு கதவைச் சாத்தி தாழிட்டான்.
அவள் கையில் இருந்த புத்தகத்தையும், அவளையும் மாறி மாறிப் பார்த்தான்.
அவள் அதைக் கண்டு கொள்ளவில்லை.
“நான் எங்க வீட்டுக்குப் போகனும்.” என்றாள் அவன் முகத்தைப் பாராமல் வேறு எங்கோ