ப்ளான் பண்ணியிருக்காள்."
"அப்புறம் அன்னிக்கு என்ன நடந்துச்சு?"
"மீராவிற்கு வியாதினு நாங்க தந்த ரிப்போர்ட பொய்னு தெரிஞ்சிட்டது…"
"எப்படி?"
"அந்த ஹாஸ்பிடல் நர்ஸ் சொல்லிட்டா"
"ஓ…"
"அதை எங்கள்ட்ட கேட்டு சண்டை போட்டாள். என் புருஷன்கிட்ட போறேன்னு கிளம்பினா… அதை தடுக்கதான் அப்படி செஞ்சேன்."
"மீராவை தடுத்துட்டா சொத்து உங்க கைக்கு வந்துடுமாடா… கேட்டால் நானே கொடுத்திருப்பேனேடா" என்று கத்திய சத்யன் அவனை அடிக்க பாய்ந்தான். அவனை தடுத்த கேசவ்…
"இரு… சத்யன்… இன்னும் விஷயம் இருக்கு. ஏன்னா மீராவிற் கருகிய உடலை அடையாளம் சொல்லி கையெழுத்து போட்டு உன் மாமனார்தான வாங்கி இருக்கார். அதுக்கு பிறகு உங்க வீட்டுக்கு சொல்லி இருக்கார்… நீங்க மீராதானா அதுன்னு தெளிவா பார்க்கலை… அந்த பஸ் விபத்துல இறந்துபோன யாரையாவது அவர் வேண்டும் என்றே தப்பாக அடையாளம் காட்டி இருக்கலாம்…."
"அதனால என்னவாகும்?" ரஞ்சன் கேட்டான்.
"அதுக்குதான் அடுத்த திட்டம் தயாராக இருந்ததே… மீராவின் தங்கையை கல்யாணம் செய்துக்க சொன்னாங்கள்ள… இந்த ப்ளான் வொர்க் அவுட் ஆச்சுனா இரட்டை லாபம். சத்யனோஞ சொத்தையும் சேர த்து அனுபவிக்கலாம்.."
"அதெப்படி முடியும்?."
"ம்… கல்யாணம் செய்தபின் சத்யனை கொல்ல ப்ளான் போட்டிருக்கலாம்… அப்போ மனுவுக்கு சத்யனோட சொத்து வரும்ல… தலையை சுத்துதா…. நாங்க போலீஸ்… இப்படித்தான் யோசிப்போம். கிரிமினலா இவங்க ஒவ்வொன்னா செய்றதை மொத்தமா கண்டு பிடிக்கறதுதானே எங்க வேலை...யார் கண்டா… மனுவுக்கும் ஏதாவது திட்டம் போட்டிருப்பாங்க"
சத்யன் திடுக்கிட்டு நிமிர… அவனுடைய பார்வையில் தெரிந்த கொலை வெறியை பார்த்த பரத் பதறினான்.
"அப்படி இல்லை சார்… எனக்கு அது தெரியாது. மீரா செத்து போனதுமே நான் விலகிட்டேன். மாமா என்னை விலக்கிட்டார்… நான் காசு பணம் இல்லாமல் சாப்பாட்டுக்கு வழியில்லாமல் நடுத்தெருவுல நிக்கறேன்…"
"இல்லடா… இப்ப லாக்கப்ல இருக்க… அப்புற்ம ஜெயில்ல போய் களி திங்க போற.." கேசவ்