நானும் அந்த தீவிற்கு செல்ல வேண்டும். ஒருவேளை அங்கு அவர்கள் இருந்தால் அங்கிருந்து என்னுடைய பார்முலா நான் மீட்டுக் கொண்டு வர வேண்டும். அப்படி இல்லை என்றாலும் அந்த இடத்திலேயே கார்த்திக்கை அழித்து அவன் மூளையை எடுத்து மீண்டுமாக ப்ரோக்ராம் செய்து அவன் நினைவுகளில் இருந்த அந்த பார்முலாவை நான் எப்படியாவது பெற வேண்டும். இதற்காக நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன் என்று கூறினான் பிரதாபன்.
அதைக்கேட்ட சத்யா கூட சற்று மிரண்டுதான் போனான். அண்ணா நமக்கு இப்பொழுது இருக்கிற செல்வாக்கும் பணமும் மட்டுமே போதும். வீணாக உயிரை பணயம் வைத்து அந்த பெருமுடா தீவுக்குள் நீங்கள் செல்ல வேண்டாம் என்று எச்சரித்தான் சத்யா.
ஆனால் எதையும் கேட்கும் மனநிலையில் பிரதாபன் இல்லை. அவரது முழு நோக்கமும் அந்த அணு ஆயுதங்களை தயாரிப்பதற்கான பார்முலாவை பெறுவதிலேயே குறியாக இருந்தது .அவர்கள் கார் சத்யாவின் வீட்டை அடைந்தது.
சென்னை...
திடீரென்று கண் விழித்து பார்த்த ராகவ் சற்று அதிர்ந்து விட்டான். எப்பொழுது நாம் இங்கு படுத்து உறங்கினோம் என்று அவனுக்கே தெரியவில்லை. உட்கார்ந்த நிலையிலேயே அமர்ந்திருந்த என்னை எப்பொழுதும் படுக்க வைத்தாள் என்று எண்ணிக்கொண்டே இறங்கியவன் வெளியே வரவும் அவனுக்காக காப்பி எடுத்துக்கொண்டு வந்தாள் குயிலி.
குயிலியிடம் இருந்து காபி வாங்கி பருகியவன் விடைபெற்று தன் வீட்டை நோக்கி சென்றான்.
அவன் உள்ளே நுழைந்ததும் அவனை வரவேற்கும் விதமாக அவன் தாய் புஷ்பம் நின்றாள். புன்னகையுடன் ராகவ் வாப்பா ஏன் இவ்ளோ நேரம் என்று அக்கறையுடன் விசாரித்தாள்.
என்ன செய்வது என்று தெரியாமல் அம்மா ஃப்ரெண்ட் கூட ஒரு மீட்டிங் டிஸ்கஷன்... லேட் ஆயிடுச்சு அதான் நைட்டு ப்ரண்டு கூட ஸ்டே பண்ணிட்டு காலையிலேயே வருகிறேன் என்றவன் தாயின் முகம் பார்க்காமல் தன் அறைக்கு சென்று விட்டான்.
சிறிது நேரத்தில் காலை சாப்பிடுவதற்காக டைனிங் டேபிளில் அமர்ந்தார்கள்.
ராகவ் ஒன்னோட ஃப்ரெண்டு பெயர் என்னன்னு சொல்லவே இல்லையே என்றாள் புஷ்பா.
தடுமாறியவன் சுதாரித்துக்கொண்டு சித்தார்த் என்றான்.
இப்போலாம் பொண்ணுங்களுக்கு கூட சித்தார்த் என்று பெயர் வைக்கிறார்களோ என்ற வார்த்தையை கேட்டதும் அதிர்ச்சியில் ராகவின் முகம் உறைந்து விட்டது.
அம்மா என்றான் அதிர்ச்சி சற்றும் விலகாமல்...
அம்மா அம்மா என்று என்னை சுற்றி வருகின்றவன் இன்று ஏதோ ஒரு பெண்ணிற்காக என்னிடமே பொய் பேசி விட்டாயே... இது சரியா என்ற புஷ்பாவின் வார்த்தைகளில்