அந்த நாளில் அந்தக சரியான சமயத்தில் நாம் கப்பலோடு பெர்முடா எல்லை பகுதியை அணுக வேண்டும். அந்த 20 செகண்ட் நேரத்திற்குள் நாம் அந்த எல்லையைத் தொடும் பொழுது நாமும் உள்ளே பாதுகாப்பாக இழுத்துச் செல்லப்படுவோம்.
நாம் அந்த எல்லையை நெருங்க வேண்டிய நேரத்தில் சற்று கவனமாக இருக்கவேண்டும். சிறிது கவனக் குறைவு ஏற்பட்டாலோ அந்த செகண்ட் நேரத்திற்கு சற்று முன்பின் சென்றாலும் நம்முடைய உயிருக்கு ஆபத்து தான். நாம் சரியான நேரத்தில் அந்த எல்லையை தொடும் பொழுது நாம் பாதுகாப்பாக உள்ளே செல்ல முடியும்.
புரிகிறது டாக்டர் பிரசாத் ஆனால் அங்கிருந்து எப்படி வெளியே வருவது.
அதற்காக நான் இந்த நவீன வகை பாராசூட்டை ரெடி பண்ணி இருக்கிறேன். இதில் காந்த மின் பலகைகள் எதனாலும் ஈர்க்கப்படாத அளவு சக்தி வாய்ந்தது. பல நவீன உத்திகளை வைத்து இந்தப் பாராசூட்டை நான் தயார் செய்திருக்கிறேன். நம்முடைய வேலை முடிந்ததும் நாம் இந்த பாராசூட்டை பயன்படுத்தி அந்த எல்லையை கடந்து வெளியே வந்துவிடலாம்.
ம்ம்... என்ன மிஸ்டர் பிரதாபன் மறுபடியும் ஆழ்ந்த யோசனை
இல்ல சார் நாம் இந்த பாராசூட் மூலமாக இங்கு வந்து அடைய முடியுமா...
இல்லை மிஸ்டர் பிரதாபன் இந்த பரஷூட் அந்த பெருமுடா எல்லைப் பகுதியில் மட்டுமே செயல்படும். நாம் இங்கிருந்து செல்லும் போது இரண்டு கப்பலில் செல்ல வேண்டும். ஒரு கப்பலை பாதுகாப்பாக அந்த பெர்மூடா எல்லைப் பகுதியை விட்டு சற்றே தூரத்தில் நிறுத்தி விட்டு ஒரு கப்பலில் நாம் முன்னேறி உள்ளே செல்ல வேண்டும். மீண்டும் நாம் பாராசூட் மூலமாக வெளியே வரும்போது அந்த பெருமுடா எல்லைப் பகுதியை கடக்கும் பொழுது நம்முடைய பாராஷூட் மீண்டும் செயலிழந்துவிடும். அந்த நேரத்தில் நாம் கடலுக்குள் தான் விழ வேண்டும். ஆனால் அங்கு நமக்காக தயார் செய்து வைக்கப்பட்டிருக்கும் கப்பல் நமக்கு அந்த சமயத்தில் உதவும். நாம் மீண்டும் கப்பலில் ஏறி கரையை அடைந்து விடலாம். இது கொஞ்ச நேரத்தில் கீழே நடந்து முடிந்து விடுவதால் யாருக்கும் எந்த சந்தேகமும் வருவதற்கும் வாய்ப்பு இல்லை. அதனால் நாம் செல்வதற்காக ஒரு கப்பலை புக் செய்யுங்கள். மற்றொரு கப்பல் மீன்பிடிப்பதற்காக லைசன்ஸ் வாங்கிய கப்பலாக பார்த்து தயார் செய்து கொள்ள வேண்டும்.
அப்புறம் முக்கியமான விஷயம் என்னவென்றால் நான் போகும்போது அந்த கார்த்திகை அழைத்து செல்ல வேண்டும். ஏனென்றால் அவர்கள் மறுபடியும் அந்த பார்முலாவை தர மறுத்தால் கார்த்திக்கை வைத்து நாம் அவர்களை மிரட்டி வாங்க வேண்டும். அதே போல அவன் கண்முன்னால் இருக்கும் அவனுடைய அத்தை மாமா, வெளியில் இருக்கும் அவனது