தந்தை இன்னும் அவனுக்கு மிக முக்கியமான உறவாகிய அவனுடைய அத்தை மகள் அந்த குயிலி இவர்களை வைத்து மிரட்டி தான் நாம் நம் காரியத்தை சாதிக்க வேண்டும். அதனால் குயிலியை உங்கள் கண்பார்வைக்குள் வைத்துக்கொள்ளுங்கள். அவளை இப்போதைக்கு கொலை செய்ய வேண்டாம்.
அதேபோல் அந்த கார்த்திக்குடன் அந்த பெர்மூடா எல்லைப் பகுதிக்குள் நாம் செல்லும் வரை எந்த பழைய நினைவுகளும் அவனுக்கு வரக்கூடாது. கார்த்திகை மிக ஜாக்கிரதையாக பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள். அவன் நமக்கு மிக முக்கியமானவன். நினைவிருக்கட்டும். எல்லாத் காரியத்தையும் இப்போதிருந்தே ஆயத்தப்படுத்த தொடங்குங்கள்.
எந்த நேரம் எப்போது கிளம்பவேண்டும் இந்தக் காரியங்களையெல்லாம் நான் மீண்டும் சந்திக்கும் பொழுது பேசிக்கொள்ளலாம் என்று சொல்ல பிரதாபனும் அங்கிருந்து சத்யாவுடன் விடைபெற்றார்.
காரில் ஏறியதும் சத்யா அண்ணா என்றான்.
சொல்லு சத்யா உனக்கு ஏதாவது சந்தேகம் இருக்கா.
சந்தேகம் இருக்க என்றா கேட்கிறீர்கள். எனக்கு தலையும் புரியவில்லை வாலும் புரியவில்லை. மொத்தத்தில் நான் சுய நினைவில் இருக்கிறேனா என்று எனக்கு புரியவில்லை. என்ன தான் நடக்கிறது எனக்கும் சொல்லுங்கள் அண்ணா. அன்றைக்கு பாதிக்கதையை சொன்னீர்கள். மீதியையும் சொல்லிவிடுங்கள்... எனக்குத் தலையே வெடித்துவிடும் போலிருக்கிறது.
பொறுமை பொறுமை... சத்யா நான் அவசியம் சொல்கிறேன். கேள்..
பெர்முடா எல்லைப்பகுதி வரை குயிலியின் பேமிலியோட கப்பலை பின்தொடர்ந்தே நாங்கள் சென்றோம்.
அந்த கப்பலை நாங்க நம்ம ஆட்களை அனுப்பி சிறை செய்தோம்.
அந்த பொண்ணோட மைன்ட்ல அவர்கள் சேமித்து வைத்திருந்த அதாவது இந்த தேசத்தை இந்த பூமியை மறுபடியும் வளமடைய செய்யணும் என்று சொல்லி அந்த பொண்ணுக்கும் சொல்லிக் கொடுத்திருந்த எல்லா டேட்டாஸையும் நம்ம புரோகிராமிங் மூலமா அழிக்க நினைத்தோம்.
நினைவிருந்தால் அவள் இறந்த பிறகு அவள் மூளையை வைத்து சில ஆராய்ச்சிகளை செய்தாலே அவள் மூளையில் பதிந்து இருந்த அனைத்து விஷயங்களையும் இன்னொருவரை அறிந்து கொள்ள முடியும்.
அந்த வகையில் கூட மறுபடியும் அந்த பார்முலா யார்க்கும் கிடைத்துவிடக் கூடாது. இந்த பூமியின் இயற்கை வளத்தை மீண்டும் செழிக்க செய்துவிடக்கூடாது என்று அவளுடைய