வந்ததால் அவன் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து விட்டான். அதற்கான ஆதாரம் என்று அவளது புகைப்படங்கள் மொத்தத்தையும் அவன் முன் கொட்டினாள் புஷ்பா.
அதுமட்டுமல்ல ராகவ்.... மிகப் பெரிய பிசினஸ்மேன் என்பதை அறிந்து உன் பிஸினஸ் நுணுக்கங்கள் எல்லாம் கற்றுக் கொண்டு உன்னை ஏமாற்றுவதற்காக திட்டம் போட்டு தான் இத்தனை நாள் நடித்திருக்கிறாள் இந்த குயிலி.
நேற்று உன்னை அடிக்க வந்தது கூட அவள் ஏற்பாடு செய்திருந்த ஆட்கள்தான். மீண்டும் உன்னை அவள் வீட்டிற்கே அழைத்து சென்று உனக்கு வைத்தியம் செய்து உன்னை காப்பாற்றுவது போல் நடித்ததும் அவளின் தந்திரமான செயல்தான். ஆனால் இவ்வளவு பெரிய அறிவு படைத்த பிஸ்னஸ் மேன் அதைக்கூட புரிந்து கொள்ளாமல் முட்டாள்தனமாக இருந்திருக்கிறானே என்பதுதான் எனக்கு வருத்தம்.
என்ன நடந்தாலும் சரி... என் பையன் எல்லாவற்றையும் என்னிடம் சொல்லி விடுவான் என்று நான் இத்தனை நாள் உன்னை நம்பிக்கொண்டிருந்த நம்பிக்கையை அசைத்துப் பார்த்து விட்டாயே... எனக்கு மிகவும் வலிக்கிறது. என் மனம் வலிக்கிறது என்று கண்களில் இருந்து கண்ணீர் துளிகள் வெளியேற அங்கிருந்து சென்றுவிட்டாள் புஷ்பா.
ராகவ்விற்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அப்படி என்றால் இத்தனை நாள் நான் குயிலியின் கண்களில் பார்த்த அந்த அன்பு பாசம் ஏக்கம் எல்லாம் பொய்யா...
அவள் என்னிடம் கூறிய அனைத்தும் பொய்யா... அவள் என்னிடமே நாடகமாடி இருக்கிறாளா என்று அவன் மனம் அடுக்கடுக்காக கேள்விகள் கேட்க எதற்கும் அவனிடம் விடையில்லை.
மாறாக தன் தன் தாய் பேசிவிட்டுச் சென்ற வார்த்தைகள் அவனைத் துளைத்து எடுத்தது. எதை நம்புவது எதை நம்பாமல் இருப்பது என்று புரியாமல் குழப்பத்தில் தலையை பிடித்துக்கொண்டு அமர்ந்து இருந்தான் ராகவ்....
தொடரும்