காலை ஆறு மணிக்கு அண்ணாவை அந்த இடத்தில் சந்திக்க வேண்டும் என்று தனக்குள்ளாகவே கணக்குப் போட்டு கொண்டு அவன் சில டீடெயில்ஸ்ஸை பென் டிரைவில் காப்பி செய்து கொண்டு அங்கிருந்து கிளம்பினான்.
சரியாக ஐந்து ஐம்பதிற்கு அந்த குறிப்பிட்ட இடத்திற்கு வந்தான். அவன் என்ன செய்வது என்று யோசிக்க அவன் முன்னால் வந்து நின்றது ஒரு கார்.
கார் கதவை திறந்து விட்டு அதில் இருந்து இறங்கி பக்கத்தில் உள்ள ஒரு கடைக்கு சென்றாள் ஒரு பெண்.
அவன் யோசிக்க ஆரம்பித்தான்.. ஏன் இவள் கதவை திறந்து விட்டு சென்றிருக்கிறாள் என்று. யோசிக்கும் போதே அவனுக்கு புரிந்து கொண்டது. வேகமாக அவள் திரும்பி வருவதற்குள் ஏறி அமர்ந்து கொண்டான் காரில். அவள் மீண்டுமாக காரில் ஏறிக்கொள்ள கார் பயணமானது.
காரை அந்தப்பெண் ஓட்ட பின்னால் இருந்த சத்யா மெதுவாக பேச்சுக் கொடுக்க ஆரம்பித்தான். ஹலோ நீங்க யாரு... என்று அவன் கேட்க அந்தப் பெண்ணும் பதில் எதுவும் பேசவில்லை.
மெதுவாக தன் ரிவால்வரை எடுத்தவன் காரை ஓட்டிக் கொண்டிருந்த அந்தப் பெண்ணின் பின் தலையில் வைத்து நீ யார் என்று சொல் என்றான்.
என்னடா என்னையே போட்டு தள்ளி விடலாம் என்று நினைச்சியா என்று கேட்ட குரலை கேட்டதும் அவன் கை தானாக மடங்கி கொண்டது. நீங்களா என்றவன் மீண்டுமாக அந்தப் பெண்மணியை உற்றுப் பார்த்தான்.
அந்த பொம்பள வேஷம் கூட உங்களுக்கு பக்காவா பொருந்தி இருக்கிறது என்று சொல்ல அமைதியாய் இரு என்று சொல்ல அவர்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு கார் சென்றது.
நாலாபுறமும் அடர்ந்த மரங்களும் செடிகளும் நிறைந்திருக்க அதற்கு நடுவில் சிறிய கட்டிடம் ஒன்று இருந்தது. அதற்குள்ளே அவர்கள் செல்ல இதுவும் அண்ணனுடைய இடம் தான் என்பதை புரிந்து கொண்டான்.
அங்கு ஓரிடத்தில் சயின்டிஸ்ட் பிரசாத்தும் அமர்ந்திருந்தார்.
ஹலோ பிரசாத் சார் வணக்கம் நல்லா இருக்கீங்களா...
நல்லா இருக்கிறேன் மிஸ்டர் பிரதாபன் நீங்க எப்படி இருக்கீங்க... ஆமா இவரு யாரு..
இவன் தான் என்னோட பிரதர் சத்யா டாக்டர் சத்யா..
கேள்விப்பட்டிருக்கிறேன். போட்டோவில் பார்த்திருக்கிறேன். ஆனாலும் நாட்கள் ஆகிவிட்டதால் சற்று முகம் மறந்து விட்டது.
என்னப்பா சத்யா எப்படி இருக்கிற.
நல்லா இருக்கிறேன் சயின்டிஸ்ட் சார்...