கொண்டாள் அவள்.
அவளை அணைத்து கொண்டவன் இதற்காகத்தானே காத்திருந்தோம் ஒருநாள். இப்போ ஏன் இப்படி சலித்து கொள்கிறாய் என்று புன்னகை மாறாமல் கேட்டான்.
ஆமா சத்...யா ஆரம்பத்துல ஏன்டா நரம்பியல் படித்தோம் என்று இருந்தது. அவர்களுடைய எண்ணிக்கை குறைவாக இருக்கும். ஆனா இப்போ அப்பாயிண்ட்மெண்ட் கொடுக்க முடியாத அளவுக்கு கூட்டம். ஒரு வாரத்திற்கு முன்னாலேயே அப்பாயின்மென்ட் பண்ணுறாங்க. அந்த அளவுக்கு மக்களுக்கு வியாதிகள் அதிகமாயிற்று.
வியாதிகள் அதிகமாயிட்டு என்று சொல்லாதே மல்லிகா. வியாதிகளை அதிகமாக்கி விட்டோம் என்று சொல்லு.
எனக்கு என்னமோ இப்போ எல்லாத்தையும் பார்த்தால் வெறுப்பா இருக்கு சத்யா. இதெல்லாம் விடலாம் போல தோணுது.
என்ன மல்லிகா... இது என்ன பேச்சு
இல்ல சத்யா நாம பாவத்துக்கு மேல பாவம் செய்யறோம் என்று தோணுது.
இங்கே இந்த பாவம் என்கிற அவர் எங்கிருந்து வந்தார்.. என்று யோசிப்பது போல செய்கை செய்தான் சத்யா.
விளையாடாத சத்யா.. உங்க அண்ணன் புட் புராடக்ஸ்ல எல்லாத்தையும் சேர்த்து கோல்மால் செய்து கோடீஸ்வரன் ஆகிட்டாரு. அதுல வர்ற side-effects யாராலும் கண்டுபிடிக்க முடியாத உண்மைதான். ஆனால் அதனால் மக்கள் பாதிக்கப்படுவது, அதுல சிகிச்சை பண்றோம் என்ற பெயரில் நாம கொள்ளையடிக்கிறது... இதையெல்லாம் கொஞ்சம் நிறுத்தி விடலாம் சத்தியா.
பணம்... பணம் ஒன்றுதான் எங்கேயும் பேசும் மல்லி. பாவம் புண்ணியம் என்று சொல்லி எதையாவது யோசிச்சுக்கிட்டு முட்டாள்தனமா எதையாவது செஞ்சு வைக்காதே.
12th முடிச்சுட்டு அதுக்கு மேல படிக்க முடியாமல் திணறிக் கொண்டிருந்த உன்னையே நரம்பியல் நிபுணரான ஆக்கினது நாங்கதான் ஞாபகம் இருக்குல்ல...
எல்லா நியாபகம் இருக்கு சத்யா. டாக்டருக்கு படிக்க வைத்தது ஞாபகம் இருக்கு. என்ன உன் காதல் வலையில் சிக்க வைத்ததும் ஞாபகம் இருக்கு. ஆனா கொஞ்சம் யோசிச்சு பார்த்தியா நம்ம சேர்த்து வைக்கிற ஒவ்வொரு பாவமும் புண்ணியமும் நம்ம பிள்ளைங்களை தொடரும்.
இந்த பாவ புண்ணியத்தை விடு. இன்னும் ஒரு வருடத்தில் நம்ம பையன் பெரிய கார்டியாலிஸ்ட்டா வந்து நம்ம கூட ஜாயின் பண்ணிக்குவான். அப்ப பாரு நம்ம ரேஞ்சு இன்னும் மாறிப் போகும்.
அது சரி உங்க அண்ணே அவருடைய பெரிய பையனை மட்டும் ஏன் பிசினஸ்மேன்னா மாத்திட்டாரு. ஏன் அவனை மட்டும் டாக்டராக்கல