செய்வதறியாமல் திகைத்து போனான் .
அம்மா அது வந்து என்று இழுத்த ராகவை நேருக்கு நேராகப் பார்த்தாள் புஷ்பா.
அவளின் பார்வையை எதிர்கொள்ள முடியாமல் சாரிமா என்றவாறு தலைகுனிந்து கொண்டான் ராகவ்.
குயிலி... பெயர் நன்றாக தான் இருக்கிறது. ஆனால் குணம் சரி இல்லையே என்றாள் புஷ்பா.
அதிர்ச்சியுடன் நிமிர்ந்து பார்த்தான் ராகவ்.
இதுதானே உண்மை சுற்றி சுற்றிவரும் குயிலி என்றவாறு குயிலியின் புகைப்படத்தை அவன் முன் நீட்டினாள் புஷ்பா.
அதிர்ச்சியோடு ஆம் என்று தலை அசைத்தான்.
இவளைப் பற்றி உனக்கு ஒன்றும் தெரியவில்லை ராகவ். எவ்வளவு பெரியவனாக வளர்ந்தாலும் பெரிய பிஸினஸ் மேனாக சாதித்தும் வாழ்க்கையில் கோட்டை விட்டு விட்டாயே என்றாள். சிறிது இடைவெளி விட்டு தொடர்ந்தாள் புஷ்பா.
இவளுடைய பெயர் பூங்குழலி. வளர்ந்தது புன்னைக்காயல் அருகில் உள்ள ஒரு கிராமம்.
தாத்தா இறந்த பின்பாக சென்னையில் உள்ள அனாதை ஆசிரமத்தில் தங்கி இருக்கிறாள். இதற்கு முன்பாக தாத்தாவுடன் வசித்த நாட்களில் அவள் பள்ளிக்கு சென்றதில்லை அவளுக்கு எல்லாமே அவளுடைய தாத்தா தான்... அப்படி தானே என்றுகேட்க அதிர்ச்சி மாறாமலேயே பதிலளிக்க மறந்து புஷ்பாவை பார்த்து கொண்டிருந்தான் ராகவ்.
இது எல்லாம் உண்மை என்று நம்பி விட்டாயா ராகவ்... இவளுக்காக தான் உன் படிப்பை முடித்ததும் மூன்று நாள் காத்திருக்க இயலாது என்று சொல்லிவிட்டு இந்தியா வந்தாயா என்று கேள்விக்கு மேல் அடுக்கடுக்காக கேள்வி கேட்க அனைத்து கேள்விகளும் உண்மை என்பதால் என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் திகைத்துப் போய் இருந்தான் ராகவ்.
என்ன ராகவ் அம்மா கேள்விக்கு உன்னால் பதில் சொல்ல முடியவில்லையா... இல்லை பதில் சொல்ல அவசியமில்லாத கேள்வியாகவே கேட்கிறேனா என்றாள் புஷ்பா.
அமைதியாகவும் இருக்க சற்று பொறுமை இழந்தவளாக பேசத் தொடங்கினாள் புஷ்பா.
ராகவ் இந்த குயிலி தன் பெயர் பூங்குழலி என்று உன்னிடம் சொன்னது எல்லாமே பொய். அவள் பெயர் குயிலி. உனக்கு விபத்து ஏற்பட்டது என்று நாங்கள் சொன்னோம் அல்லவா. அதற்கு முன்பு வரை அவள் உன் அண்டை வீட்டு சிறுமி. அவளது தாய் தகப்பன் விபத்தில் இறந்து விட்டார்கள். ஆனால் அவரது உறவினர்கள் அவளை நல்ல முறையில் படிக்க வைத்தார்கள். அவள் நடன வகுப்புக்கும் சென்றிருக்கிறாள். கராத்தே கற்று இருக்கிறாள்.. டிராயிங்ல் நேஷனல் லெவலில் பரிசும் பெற்றிருக்கிறாள் என்று அடுக்கடுக்காக பல சர்டிபிகேட்டுகள் புகைப்படங்களை அவன் கண்முன்னால் போட அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி