தெரியலை... அதுக்கு உடனடியா ஆபரேஷன் செய்யணும்... அதே மாதிரி முதுகுத் தண்டுலையும் லேசா அடி பட்டிருக்கு... அதுக்கும் சிகிச்சை செய்யணும்.... நாளை மறுநாள் அதுக்குண்டான சிறப்பு மருத்துவர் வருவார்.... அன்னைக்கு அவருக்கு ஆபரேஷன் பண்ணிடலாமா... இல்லை நீங்க வேற யாராவது டாக்டர் பார்க்க விரும்பறீங்களா....”, அனந்துவின் ரிப்போர்ட்டை அவர்களிடம் விளக்கியபடியே மருத்துவர் கேட்டார்....
“எங்களுக்கு இன்னைக்கு சாயங்காலம் வரை டைம் கொடுங்க டாக்டர்.... நாங்க எங்க முடிவை சொல்றோம்....”, மருத்துவரிடமிருந்து அனந்துவின் ரிப்போர்ட்டை வாங்கிய சியாமளாவின் பெரியண்ணன் அவளை அழைத்துக்கொண்டு வெளியில் வந்தார்....\
ரிசெப்ஷனில் நின்றிருந்த மற்ற சகோதரர்களிடம் மருத்துவர் கூறியதை கூற அவர்களும் எதற்கும் வேறொரு மருத்துவரிடம் கேட்டுவிட்டு முடிவெடுக்கலாம் என்று கூற, வீடு வந்து சேர்ந்தார்கள்...
அனந்துவின் நிலை ஊசலாட்டத்தில் இருக்க மைத்தியின் வெளிநாட்டு பயணம் எந்த அளவிற்கு சாத்தியப்படும்....
தொடரும்
Next episode will be published on 14th Oct. This series is updated weekly on Wednesday mornings.