கோவிலையும் கண்டாள். இடங்கள் கொஞ்சம் வளர்ச்சி ஏற்பட்டு சற்று மாறி இருந்தது.
மீண்டுமாக அந்த கோவிலினுள் சென்றாள். அங்கு எந்த ஒரு சிலைகளும் இல்லாமல் இருப்பதைக் கண்டவள் இதற்கு முன்பும் நாங்கள் இங்கு தானே வந்து கடவுளை வேண்டிக் கொண்டு இருக்கிறோம். அப்போதும் எந்த படமும் சிற்பமோ சிலையோ எதுவுமே இருக்கவில்லையே.
ஆனால் ஏன் இங்கு வந்து வணங்கினோம். அப்படி என்றால் இங்கு ஏதாவது இருக்கிறதா என்று நோட்டமிட்டு பார்த்தவள் அந்த இடத்தில் எதுவுமே இல்லாமல் கற்சுவர்கள் மட்டுமே கண்டாள்.
அவளுக்கு யோசனையாக இருந்தது. யாரிடம் கேட்கலாம் என்று யோசித்தவள் நேராக ஆசீர்வாதம் தாத்தாவிடம் சென்று தாத்தா இந்த இடத்தில் முன்பு கோவில் ஏதாவது இருந்ததா என்று கேட்டாள்.
அவரோ இங்கு கோவில் எதுவும் இல்லை அம்மா... அந்த காலத்தில் புத்த மதத்தை சேர்ந்த சில துறவிகள் இங்கு பல வேளைகளில் அமர்ந்து தியானம் செய்வார்கள். அப்படிப்பட்ட இடம் தான் அது என்று சொல்ல புத்த என்ற வார்த்தை அவளுக்கு எங்கேயோ ஒரு சம்பந்தம் இருப்பது போல உணர்த்தியது.
அவள் கடவுளை வணங்குவது கிடையாது. ஆனால் தாத்தா தினமும் இந்த இடத்திற்கு அழைத்து வந்தது ஞாபகம் வந்தது. அப்படி என்றால் தாத்தா எதற்காக இங்கு அழைத்து வந்து இருப்பார். இங்கு வைத்து அவர் ஏதாவது சொல்லியிருக்கிறாரா என்று மீண்டும் தன் மூளையை கசக்கி யோசிக்க ஆரம்பித்தாள்.
அவள் யோசித்து யோசித்து பார்க்க முடிவில் அவளுக்கு தாத்தா கூறிய அந்த வார்த்தை நினைவு வந்தது. இதேபோல பல இடங்களில் உனக்குத் தேவையான ரகசியங்கள் மறைந்து கிடைக்கிறது குயிலி. நீ எல்லாவற்றையும் அறிந்து கொள்ள வேண்டுமானால் இதேபோல பல இடங்களை நீ சந்தித்தாக வேண்டும் என்று கூறியது நினைவுக்கு வந்தது.
அந்த இடத்திலேயே அமர்ந்தவள் மீண்டும் மீண்டும் யோசிக்க ஆரம்பித்தாள். இது புத்தர்கள் அமர்ந்து தியானம் செய்யும் இடம் என்றால் இதே போல பல இடங்களை நான் கண்டுபிடிக்க வேண்டுமே... எப்படி கண்டுபிடிப்பது என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டே இருக்க அந்த வெள்ளை பேப்பரில் இருந்த ஒற்றையாய் நிற்பதே உன் வழி என்ற அந்த ஒரு வரி நினைவிற்கு வந்தது.
ஒற்றையாய் நிற்பதே உன் வழி என்று தாத்தா சொன்னாரே... அப்பொழுது இங்கு ஏதோ எனக்காக ஒரு வழி இருக்கிறது என்று நினைத்தவள் தாத்தா உடன் தங்கியிருந்த அந்த