மாலை நேரம் அந்த திருவிழாவிற்காக வெளியே செல்வதென முடிவெடுத்து சந்தியா ஜனனி இருவரும் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக சென்றனர். எதையெல்லாம் மறக்க வேண்டும் என்று ஜனனி நினைத்து சென்னைக்கு வந்தாலோ அதே விஷயங்கள் அதே நபர்கள் மீண்டும் அவள் கண் முன்னால் வர போகிறார்கள் என்பதை அறியாமல் மிகவும் ஆர்வமாக திருவிழாவிற்கு சென்றாள்.
அதே நேரத்தில் அஸ்வித் ஸ்வீனா ஜனா மூவரும் தங்கள் அறையில் அமர்ந்து இருந்தார்கள்.
ஸ்வீனாவிடம் இந்த ஜனனி பற்றிய பேசியாக வேண்டும் என்ற கோபத்துடன் காலை அவளை சந்தித்த ஜனாவிற்கும் இப்பொழுது ஸ்வீனாவை சந்திக்கும் ஜனாவிற்கும் வித்தியாசம் இருந்தது. எளிதாக ஏழு வித்தியாசம் கண்டுபிடிக்கும் அளவு மாறி இருந்தான். அதனால் அவனால் கோபத்துடன் பேசவும் இயலவில்லை. ஆனாலும் தனு சொல்லிய அந்த வார்த்தைகளை அவனால் ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை. அதனால் அதைப்பற்றி பேசியே ஆகவேண்டும் என்று எண்ணி முடிவாக பேச ஆரம்பித்தான்.
ஸ்வீனா ஒரு விஷயத்தை பற்றி பேச வேண்டும்.
சொல்லுங்க தனாண்ணா என்றாலும் அவள் கண்கள் அவள் கையிலிருந்த பைலிலேயே கவனமாயிருந்தது.
உனக்கு தெரியுமா... தனுகுட்டி சொன்னாலே உன்னோட தோழி ஜனனி அந்த விஷயம் பற்றி தான் பேசணும்.
அதைப்பற்றி பேசுறதுக்கு என்ன இருக்கு அண்ணா... அதை நீங்க முடிவு பண்ண வேண்டிய விஷயம். உங்க பொண்ணு உங்க கிட்ட கேட்டு இருக்கா.. அதற்கு பதில் நீங்க சொல்லணும். அவ்வளவு தான்.. இதுல என் கிட்ட பேசுறதுக்கு என்ன இருக்கு என்று பதில் சொன்னாலும் அவள் விழிகள் அவள் கையில் இருந்த ஃபைலிலே இருந்தது.
இருக்கு ஸ்வீனா என்றவன்... அவள் உன் தோழியாக இருக்கலாம் ஆனால் அவளைப் பற்றி உனக்கு ஒரு ஆறு மாதமாக தானே தெரியும். ஒருவேளை அவள் நம்மை ஏமாற்றுவதற்காக கூட இப்படி செய்திருக்கலாம் அல்லவா.. தனுவின் மனதை மாற்றி அவளின் காரியத்தை சாதித்துக்கொள்ள பார்த்து இருக்கலாம் அல்லவா என்று ஒரு வழியாக பேசி முடித்தான்.
அவளின் காரியம் என்று நீங்கள் சொல்வது எதை பற்றி என்று புரியவில்லையே அண்ணா என்று சற்று கோபத்துடன் கேட்டாள்.
வேறு என்னவாக இருக்க முடியும்.. பணம் மட்டும் தான் காரணமாக இருக்க முடியும்.. இந்த உலகத்தில் வாழ்வதற்கு பணம் மட்டும் இருந்தால் போதும் அல்லவா...
அப்படி என்று நீங்கள் சொல்கிறீர்களா அல்லது உங்கள் ஆருயிர் காதலி ஸ்வேதா