என்ன தம்பி நீங்க.... அந்தப் பெண்ணை பார்த்தால் மிகவும் நல்லவள் போல தெரிகிறாள். அதனால் மீண்டும் ஒருமுறை யோசித்துப் பாருங்கள்.
அவள் நல்லவனாக தெரிகிறாள் என்றால் என்ன சொல்ல வருகிறீர்கள். புஷ்பா அம்மா கெட்டவர்கள் என்று சொல்ல வருகிறீர்களா...
ஐயோ தம்பி... நான் அப்படி சொல்லவில்லை. ஒருமுறை யோசித்துப் பாருங்கள். சில பிரச்சனைகளுக்கு மனம் விட்டு பேசும் போது நல்லதொரு தீர்வு கிடைக்கும்.
நீங்கள் அவளிடம் பேச சொல்கிறீர்கள் என்றால் புஷ்பா அம்மா சொல்வது பொய் என்று தானே அர்த்தம். அப்படி என்றால் என் அம்மா காட்டிய அனைத்து ஆதாரங்களும் பொய்யென்று செல்கிறீர்களா... என் அம்மாவின் மீதே சந்தேகப்பட சொல்கிறீர்களா என்று கோபத்துடன் கத்தியவன் கையில் இருந்த டீ கோப்பையை கீழே எறிந்தான். அவன் கோபத்தின் அளவை வெளிப்படுத்தியது உடைந்து சிதறிய தேநீர் கோப்பை.
ராமு சற்று அதிர்ந்துதான் போனார். ஏனென்றால் சிறு வயதிலிருந்தே ராகவ்வை வளர்த்தவர் ராமு தான். அந்த தைரியத்தில் தான் பேசினார். ஆனால் இப்படிப்பட்ட ஒரு கோபத்தை அவனிடம் எப்போதுமே அவர் கண்டதில்லை... எதிர்பார்க்கவும் இல்லை. எப்பவுமே சாந்தத்தின் வடிவமாக பொறுமையாக அமைதியாக தீர்க்கமாக யோசித்து பேசுபவன் ஏன் இப்போது மட்டும் இப்படி நடந்து கொள்கிறான் என்று அவரால் புரிந்து கொள்ள முடியவில்லை .
ஹாலில் சத்தம் கேட்டதும் என்னவென்று பார்ப்பதற்காக தன் அறையிலிருந்து வெளியே வந்தார் புஷ்பா.
கோபமாக இருக்கும் ராகவும் அதிர்ச்சியுடன் எதையோ சொல்ல துடித்துக்கொண்டிருக்கும் ராமுவையும் கண்டதும் புஷ்வாவிற்கு நிலைமை புரிந்துவிட்டது.
என்ன பிரச்சனை... இங்கு என்ன நடக்கிறது என்று புரியாத மாதிரி கேட்டாள் புஷ்பா.
அம்மா உங்களையே இவர் சந்தேகப்படுகிறார்... நான் அவளிடம் அதுதான் அந்த குள்ள வாத்திடம் நடந்து கொண்டது தவறாம். அவருக்கு குயிலியை நன்றாகத் தெரியும் என்று நினைக்கிறேன்.
இப்பொழுது நடந்து முடிந்தது இவருக்கும் நன்றாக தெரியும். ஆனால் இப்பொழுது வந்து அந்தக்குயிலி நல்லவளாக இருப்பாள்... ஒரு நிமிடம் யோசித்து பார் என்கிறார். அப்படி என்றால் உங்களை பொய் சொல்வதாக இவர் குற்றம் சாட்டுகிறாரா என்றவன் அம்மா இவரும் அந்த குயிலியின் திட்டத்தில் சேர்ந்தவரோ என்ற எண்ணமும் வருகிறது. இனி இவர் நம்முடன் இருக்கும் ஒவ்வொரு நிமிடமும் நமக்கு ஆபத்துதான் என்றவன் யாரும் எதிர்பாராத நேரத்தில் ராமுவின் சட்டையைப் பிடித்துக் கொண்டு வெளியேறினான். வீட்டை விட்டு