"சரி… ப்ராமிஸ்" இயல்பாக சத்தியம் செய்தவன்… உள்ளுக்குள் பயப்பட ஆரம்பித்தான். சத்யன்னு இழுக்கிறாளே...ஏடாகூடமாக எதுவும் நடக்க கூடாது. இந்த மீரா கல்யாணம் ஆனவள்…
"எனக்கு மனுவை பிடிக்கறதால சத்யனை அவாய்ட் பண்ண முடியலைனு நினைச்சேன். ஆனால்… சத்யன் மேல ஒரு க்ரஷ் முதல் பார்வையிலேயே வந்துடுச்சு." என்றவள் சத்யனை பார்த்த அன்று அவள் கண்ட கனவை சொன்னாள்.
'ஐயோ…. இந்த பொண்ணு என்ன சொல்கிறாள். அமெரிக்கா க்ளைமேட்ல இருக்கும் என்னாலயே தாங்க முடியலையே… மத்தவங்க இதை கேட்டால் என்ன நினைப்பாங்க… ' ஜெமியின் மனம் ஓலமிட்டது.
"நேத்து சத்யனை பார்த்தேன். இரண்டு நாள் கழிச்சு பார்த்ததாலயோ என்னவோ ரொம்ப சந்தோஷமாக ரியாக்ட் பண்ணிட்டேன் போலிருக்கு… அந்த ஆள்…. ஆமாம்.. அந்த ஆள்தான்… என்னை ரொம்ப கேவலமாக திட்டிட்டார்…"
'அப்பாடி நல்லதுதான்… தேங்க் காட்..' மனதிற்குள் குதூகலித்தான்.
"நானும் பதிலுக்கு திட்டிட்டேன்…. ஜெமி… இந்த கோபத்தை இப்படியே மெயின்டெய்ன் பண்ணனும். அதுதான் நல்லது. ஆனால் மனுவை பார்க்கனும்னு நினைச்சு திரும்பவும் அந்த ஆள்கிட்ட அசிங்கப்படக் கூடாது. அதனாலதான் இந்த ஊரை விட்டு போகணும் என்று நினைக்கறேன்."
"உன்னுடைய நிலைமை எனக்கு நல்லா புரியுது. நீ எடுக்கிற முடிவு கரெக்டுதான். அவன் கல்யாணம் ஆனவன். மனைவி விவாகரத்து கேட்டிருக்கிறாள். அப்புறம் காணாமல் போய் விட்டாளாம். இவன் தொல்லை தாங்காமல் ஓடி போய் விட்டாள் போல. ஓகே… என்ன சிக்கல்னு நமக்கு தெரியாது.. நாம் அவனிடம் பழக்கம் வைத்துக் கொள்ள வேண்டாம். " என்றவன் தொடர்ந்து,
" நீ இந்த இடத்தை விட்டுப் போகணும்... திரும்பவும் சத்தியன், மனுவை நீ பார்க்க கூடாது என நினைக்கிறேன். ஆனா இப்போ உனக்கு ஒரு ட்ரீட்மென்ட் ஆரம்பிக்க போகுது. நீ அம்னீசியாவில் இருந்து முழுசா வெளிய வர போகிறாய். அப்போது இதெல்லாம் மறந்து போகவும் வாய்ப்பு இருக்கிறது. அதுக்கப்புறம் யூஎஸ் போறதா இல்லை. இங்கே இருக்கிறதானு முடிவெடுக்கலாம்.அது வரைக்கும் நீ அமைதியா இரு. அந்த பக்கமே திரும்பாமல் இரு" என்று ஜெனி அட்வைஸ் செய்தான்.
அவளிடம் இயல்பாக பேசினாலும் ஜெமி தனக்குள் ஒரு கணக்கு போட்டான். அவளுக்கு அம்னீஷியா குணம் ஆகி விட்டால் அவளுடைய பழைய வாழ்க்கை அவளுக்கு நினைவு