நம்பாதே… பொண்ணுனா கேவலமாக நினைக்கிற கார்மேகத்தையும் நம்பாதே… திருந்தின மாதிரி இவன்க நடிக்ககூட செய்வாங்க. விலகியே இரு. நல்லவனா கண்ணுல படறப்போ கல்யாணம் பண்ணிக்கோ. நீயே சம்பாதிச்சு உன் வாழ்க்கையை நடத்திக்கற.. யாருக்கும் பயப்பட வேண்டாம்."
"சரிதான்… ரேச்சல். இந்த உலகத்துல் நல்லபடியாக வாழனும்னால் என்னை நான்தான் கவனிச்சுக்கனும். பத்திரமா இருப்பேன்" என்று சொன்ன கல்பி கிளம்பி சென்றாள்.
அவளுக்கு அட்வைஸ் செய்ததால் ரேச்சலுக்கும் தன்னம்பிக்கை வந்து விட்டது. நம்மை நாம்தான் பத்திரமாக பார்த்துக்கனும்… அதுக்கு மனம் உடல் இரண்டையும் ஹெல்தியாக வச்சுக்கனும். மனதும் உடலும் ஆரோக்கியமாக இருந்தால்தான் போராட்டங்கள் வெற்றி பெறும்..
திட்டமிட்டபடி போலிஸ் ஸ்டேஷனுக்கு சென்று மீராவின் முகவரியை போலிஸ் ஏட்டையாவிடம் வாங்கிய ஜெமி அந்த முகவரிக்கு சென்றான். அது சிட்டிக்குள்தான் இருந்தது. ஆனால் அந்த வீடு பூட்டி கிடந்தது. அருகிலிருந்தவர்களுக்கும் அவர்கள் எங்கு சென்றார்கள் என்பது தெரியவில்லை.. தங்கதுரையை போலிஸ் அழைத்து சென்றபின் அந்தம்மா மகளுடன் வீட்டை பூட்டிவிட்டு வெளியே கிளம்பியதாக சொன்னார்கள்.
அதே சமயத்தில் மருத்துவமனைக்கு சென்ற சத்யனுக்கும் ஏமாற்றம்தான் மிஞ்சியது. மீராவிடமிருந்து ரேச்சலுக்கு முகமாற்று சிகிச்சை நடந்தது பதிவாகி இருந்தது. அந்த மதுசூதனன் மீராவின் ஆப்ரேஷன் முடிந்தபின் லண்டன் சென்று விட்டார். அதனால்தான் ரேச்சலை கவனிக்க வத்சலாவை நியமித்து இருக்கிறார்கள்.
"எல்லாம் சரி. ரேச்சல் என்ற பெயர்… அது அவளாக இருக்க முடியாது அல்லவா." சத்யன் கேட்டான்.
"ரேச்சல்னு ஃபேஸ்புக்கில் டைப் செய்தாலே எவ்வளவு பேர் வருவார்கள் தெரியுமா? இது வேற முகவரி போட்டிருக்கு. வள்ளியூர்னு இருக்கு."
"நாம அங்க போய் பார்க்கலாமா?"
"எதுக்கு… அந்த ரேச்சல் மீராபோல இருக்காளானு பார்க்கவா?. முகமாற்று சிகிச்சையினால் டோனருடைய முகம்தான் வரும்னு சொல்ல முடியாது."
"எனக்காக ஒரு தரம் வா ரஞ்சன்" அவனை கட்டாயபடுத்தி நாகர்கோவில் அருகில் இருக்கும் வள்ளியூருக்கு போக திட்டமிட்டான்.
தொடரும்
Next episode will be published on 27th Oct. This series is updated weekly on Tuesday evenings.