தொடர்கதை - உள்ளம் கொள்ளை போகுதே... - 07 - ஜெபமலர்
திருப்பலி நடந்துகொண்டிருக்க திருப்பலியில் கலந்து கொள்ள ஜனனி சந்தியா இருவரும் ஆலயத்திற்குள் சென்றனர்.
அந்த மாதா கோயில் வளாகம் முழுவதும் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. வந்திருந்த மக்கள் கூட்டத்தில் ஐந்தில் ஒரு பகுதியினர் திருப்பலியில் கலந்துகொண்டிருந்தனர். மீதி அனைவரும் அங்கிருந்த கடைகள், ராட்டினம் என்று ஒவ்வொரு பக்கமாக சுற்றி திரிந்து கொண்டிருந்தனர். மக்கள் அனைவர் முகத்திலும் மகிழ்ச்சி மட்டுமே பொங்கி வழிந்தது. கூட்டம் கூட்டமாக குடும்பம் குடும்பமாக மக்கள் ஆங்காங்கே தனித்திருந்து பேசி சிரித்துக் கொண்டிருந்தனர்..
திருப்பலியில் கலந்து கொண்டு திரும்பி வரும் போது ஜனனி முகம் இலகுவாக இருப்பது போல் அவளுக்கு தோன்றியது. சந்தியா ஜனனி மற்றும் அவளது தோழிகள் ஷாப்பிங் செய்ததோடு ஐஸ்கிரீம் பாப்கார்ன் என்று ஒவ்வொன்றாக வாங்கி கொறித்துக் கொண்டு அந்த பகுதியை சுற்றிக் கொண்டிருந்தனர்.
சிறுவயதில் தவறாமல் தன் குடும்பத்துடன் இந்த திருவிழாவில் பங்கு கொள்வாள். ஆனால் கடந்த ஆண்டு அவளுக்கு இந்த திருவிழாவில் கலந்து கொள்வதில் விருப்பம் இல்லாமல் போய்விட்டது. மீண்டும் இந்த திருவிழாவில் கலந்து கொள்வோம் என்று அவள் நினைத்துக் கூட பார்க்கவில்லை. ஆனாலும் இப்படி ஒரு வாய்ப்பை உருவாக்கிக் கொடுத்தது சந்தியா தான் என்று அவளை அன்புடன் பார்த்தாள்.
ஜனனி இதெல்லாம் பெரிய விஷயமே இல்லை. இனி உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும் என்றாள் சந்தியா.
ஒரு வெறுப்பு கலந்த வெற்றிப் புன்னகையை உதிர்த்தவள் நடக்கப்போகிறதை மட்டும் பேசு சந்தியா. நடக்காததை நினைத்து மன கோட்டை கட்டிக் கொண்டு ஆகாயத்தில் சிலம்பம் பண்ணுவதைவிட நடப்பதை மட்டும் ஏற்றுக் கொள்ள பழகிக் கொள்ள வேண்டும் என்றாள் ஜனனி.
இனி உன் வாழ்க்கையில் எல்லாமே நல்ல விதமாக தான் நடக்கும் என்று பேசி சிரித்துக் கொண்டே மகிழ்ந்திருந்தனர் அந்த தோழியினர்.
அங்கிருக்கும் ராட்டினம் பகுதிக்கு செல்லலாம் என்று அவர்கள் கிளம்ப அவர்கள் அனைவரின் கண்களும் அங்கிருந்த பூக்கடையின் முன்பாக நிலைகுத்தி நின்றது.
பூ வாங்குவதற்காக கூட்டத்தோடு கூட்டமாக நின்ற ஒரு வாலிப பெண்ணின் பக்கத்தில் நின்று கொண்டிருந்தனர் சில ஆண்கள்.
அதில் ஒருவனின் கை அந்தப் பெண்ணின் இடையை தொட போக அதை பார்த்து விட்டனர்