ஜனனியும் அவளது தோழியினரும்.
ஜனனி அவனை தடுக்க வேகமாக இரண்டடி முன்னால் வைக்க அதற்குள் பூ வாங்கி திரும்பிய அந்தப் பெண் அவனது செய்கையை புரிந்து கொண்டு அவனை முறைத்து விட்டு அந்த இடத்தை விட்டு கடந்து சென்றாள். ஆனால் அவளின் முறைப்பு அவனை ஒன்றும் செய்து விடவில்லை என்பது போல மச்சான் மிஸ் பண்ணிட்டோமே என்றபடி திரும்பினான் அவன்.
அவன் கன்னத்தில் ஓங்கி அறைய வேண்டும் போல் இருக்க ஜனனி வேகமாக இன்னும் இரண்டடி முன்னால் எடுத்து வைத்தாள். ஆனால் அவனது முகத்தை பார்த்த அதே நேரத்தில் அவளது கால்கள் தன்னால் இரண்டடி பின்னால் எடுத்து வைத்தது.
அவனைப் பார்த்ததும் சந்தியாவின் உதடுகள் முத்து என்று உச்சரிக்க சற்றும் யோசிக்காமல் சந்தியா ஜனனியின் கையை இறுக்கமாக பற்றிக்கொண்டாள். ஜனனி வந்து விடு போய்விடலாம் என்று சொல்ல அவளும் அவனை பார்த்து முறைத்து விட்டு பொறுக்கி என்று திட்டிவிட்டு அங்கிருந்து நகர முயன்றாள்.
டேய் மாமா... இங்க பாருடா யார் வந்திருக்கிறாங்க என்று நக்கலாக சிரித்தான் முத்து.
மாப்ள.. அட ஆர் ஜே டா... இங்கே எப்படி என்றான் ஆச்சரியம் விலகாமல் அவன் நண்பன்.
ஆர்ஜே இல்லடா ... ரவுடி ரங்கம்மா... மாமியார் வீட்டுக்கு போயிட்டு வந்த பிறகு காணாமல் போய் விட்டாள். இப்போ மறுபடியும் சும்மா கும்முன்னு வந்து இருக்கிறாள்டா என்று சொல்ல ஒழுங்கா பேசவில்லை என்றால் பல்லை உடைத்து விடுவேன் என்று அடிக்குரலில் சீறினாள் ஜனனி.
வெறும் பத்து மாசம் தான் இருந்திருக்கிற போல மாமியார் வீட்டில். அதுக்குள்ள போதும் போகலாம் என்று மூட்டை கட்டிட்டு வந்து விட்டாய் போல... கூட கொஞ்ச நாள் இருந்து பார்த்திருந்தால் தெரிந்து இருக்கும். மாமியார் வீட்டு வாழ்க்கை என்ன என்று என்றான் முத்து.
ஏய்... என்று அவள் பதிலுக்கு கத்த இந்த சத்தத்தை அடக்கி உன்னை முற்றத்தில் படுக்க வைக்கனும் டீ.... இல்லை இல்லை படுக்க வைப்பேன்டி என்று முகம் சிவக்க ஆக்கிரோஷமாக கத்தினான் முத்து.
அவன் முகம் சிவந்து விகாரமாய் காட்சி அளித்தான். அவன் நண்பர்கள் அவன் கையைப் பற்றி அடக்கி வைத்திருக்க அவனோ அவளின் மேல் பாய்வது போல துடித்து கொண்டிருந்தான்.
உன்னால் என்னை ஒன்றும் செய்ய முடியாது டா... ஒரு தடவை பட்டும் இன்னும் புத்தி வரவில்லை அல்லவா... இன்னொரு முறை என்னிடம் மாட்டினால் உன்னை நடைபிணமாக மாற்றி விடுவேன் என்று சீறினாள் அவள்.
சுற்றி நின்ற அனைவரும் வேடிக்கை பார்த்தார்களே தவிர ஒருவரும் விலக்கு பிடிக்கவும் வரவில்லை... உதவிக்கும் வரவில்லை. தியேட்டரில் படம் பார்ப்பது போல எதிரில் நின்று