போயிருந்தது. அப்படி இருக்கும் போது அவனைக் கண்டதுமே ஏன் அப்படி ஒரு கனவு வர வேண்டும் என்று தோன்ற அதே நேரத்தில் அவன் ஸ்வேதா ஸ்வேதா என்று ஒரு பெண்ணிற்காக ஏங்கி நின்றதும் நினைவு வந்தது. அந்த நினைவின் எதிரொலிப்பாய் அவள் முகத்தில் தோன்றிய மலர்ச்சியும் மங்கி போனது.
கற்பனையில் நாமாக உருவாக்கும் ஒரு மனிதன் நேரில் வருவதற்கு வாய்ப்பில்லை என்று நினைத்து இருக்கும் போது அந்த எண்ணம் தவறு என்று ஆகிவிட்டதே என்று நினைக்கையில் அவள் முகம் நொடிக்கு ஒரு மாறுதலைக் காட்டியது.
இதையெல்லாம் தள்ளி அமர்ந்து இருந்து பார்த்து கொண்டிருந்த சந்தியாவிற்கு ஜனனியின் நினைவு ஓட்டம் புரிந்தது. இதற்கு மேல் இவளை நினைக்கவிட்டால் அந்த நாளும் நினைவு வந்து கஷ்டத்தை தானாக இழுத்து கொள்வாளே... இப்பொழுது என்ன செய்யலாம் என்று யோசிக்கும் போதே ஜனனியின் அலைபேசி ஒலித்தது.
இந்த நேரத்தில் யார் அழைக்கிறார்கள் என்று யோசித்து கொண்டே பார்க்க திரையில் ஸ்வீனா என்ற பெயர் மின்னியது.
ஸ்வீனா இந்த நேரத்தில் ஏன் அழைக்கிறாள் என்ற யோசனையுடன் அழைப்பை ஏற்று ஹலோ.. ஸ்வீனா என்றாள் ஜனனி. ஜனனியின் அந்த ஒரு வார்த்தையில் பதட்டம் நிறைந்து இருந்தது.
தொடரும்
Next episode will be published as soon as the writer shares her episode.