இதே போல ஒரு பௌர்ணமி நிலவு ஒளியில் அமர்ந்து சந்தியா உடன் பேசிய அந்த நாள் நினைவு வந்தது. (சரி சரி ... அவங்க fb சொல்ல போறாங்க போல ... நாமும் தெரிந்து கொள்ளலாம்.. வாங்க).
சந்தியா ஜனனியின் மடியில் படுத்து இருக்க தோழிகள் சுற்றி அமர்ந்து இருக்க ஒவ்வொருவரும் தனக்கு வரப்போகும் வாழ்க்கை துணை எப்படி இருக்க வேண்டும் என்று ஆசை ஆசையாக சொல்லி கொண்டு இருந்தனர்.
ஜனனியின் முறை வந்தது. அவளும் மற்றவர்களைப் போல என்னை புரிந்துகொண்டவனா என்னை நேசிக்கிறவனா இருந்ததால் போதும் என்று சொல்ல சந்தியாவோ அதெல்லாம் முடியாது. அவன் இல்லை இல்லை அவர் எப்படி இருக்க வேண்டும் என்று சொல்லு ஜனனி என்று நச்சரித்தாள்.
அடங்குடி... என் கற்பனை காதலனை உனக்கெல்லாம் காட்ட முடியாது என்று வார்த்தையை விட அனைவரும் சொல்லியே ஆக வேண்டும் என்று ஒன்றாக சேர்ந்து கொள்ள ஜனனியும் சொல்ல ஆரம்பித்தாள்.
அவரது உயரம் ஆறடிக்கு மேல இருக்கனும்... கருப்பும் இல்லாமல் சிவப்பும் இல்லாமல் மாநிறமாக இருக்கனும்.. ஒல்லியாகவும் இல்லாமல் குண்டாகவும் இல்லாமல் கட்டுடலா பார்த்தும் நெஞ்சில சாஞ்சிக்க தூண்டுற ஜிம்பாடியா இருக்கனும்... அவனோட பார்வையிலே மனதை கட்டி போடுகிற மன்மதனா இருக்கனும் என்று சொல்லி கொண்டே போக அவள் தோழியரோ உன் அழகுக்கு நிச்சயம் மன்மதன் வருவான் என்று சொல்ல சந்தியாவோ மன்மதன் வருகிறானோ இல்லையோ என் ஜானுக்கு ஏற்ற ஒரு ஜனா வருவான் என்று சொல்ல அந்த இடமே சிரிப்பு சத்தத்தில் களை கட்டியது.
அவள் சொன்ன ஒவ்வொரு வார்த்தையையும் இப்போது ஜனனியின் மனம் அந்த பிகே² உடன் ஒப்பிட்டு பார்த்தது.
அவள் விருப்பத்திற்கு கொஞ்சமும் மாறாமல் சொல்லி செய்த சிற்பம் போல அச்சு அசலாக அப்படியே இருந்தான்.
அவனை நினைத்து ஒருக்காலம் கட்டிய கனவு கோட்டைகள் தான் அவனை சந்தித்ததுமே கனவாக வந்து இம்சித்திருக்கிறது என்று புரிய அவள் உதட்டில் ஒரு புன்னகை தோன்றி மறைந்தது.
ஆனாலும் தன்னுடைய கடந்த காலம் தெரிந்தால் நிச்சயம் அவன் தன்னை ஏற்றுக் கொள்ள போவதில்லை. அவன் மட்டுமா இனி யாருமே ஏற்றுக் கொள்ள போவதில்லை. ஏன் அவளுக்குமே திருமணத்தில் இருந்த நாட்டம் விருப்பம் கனவு எல்லாம் மறைந்து தான்