ஒரு நிமிட அதிர்ச்சிக்குப் பிறகு..
"என்னது இது? யார்கிட்ட கொடுக்கணும்?" என்றாள்.
தினேஷ் "உனக்குத் தான் ரம்யா, உன்னைத் தான் ரம்யா நான் ! எப்படி சொல்றதுன்னு தெரியல?” " “நீயும், நீயும் தானே?சொல்லு!”
"நோ! நோ !" பேப்பரைக் கசக்கி அவன் கையிலேயே திருப்பிக் கொடுத்து விட்டு வேகமாகப் படிகளில் இறங்கினாள்.
“ரம்யா! சொல்லிட்டுப் போ! ப்ளீஸ் ! “
“நோ!” என்றாள் மறுபடியும் திரும்பி.
வகுப்புக்குள் மறுபடியும் நுழைந்து தன் இடத்தில் உக்கார்ந்தாள் , அவள் உடல் நடுங்கிக் கொண்டு இருந்தது. எல்லாரும் தன்னையே பார்ப்பது போல் ஒரு உணர்வு.
“என்ன ஆச்சு? என்ன ஆச்சு ?” மெல்லிய குரலில் கேட்டாள் கண்மணி. ஒன்றுமில்லை “கண்மணி, எனக்கு ஒரு சின்ன உதவி பண்ணுவியா ?”
“கொஞ்சம் தண்ணி கொடேன்!
வாட்டர்பாட்டிலை எடுத்துத் திறந்து கண்மணி கொடுத்தும், ரம்யாவின் கை நடுக்கம் நிற்கவில்லை.
இப்படி நடக்கும் என்று அவள் ஒரு நாளும் எதிர்பார்க்கவில்லை! வகுப்பு முடிந்ததும் கண்மணியிடம் மட்டும் “ அந்த தினேஷ் இல்ல, அவன் என்கிட்ட லவ் ப்ரொபோஸ் பண்ணான்!”
நீ என்ன சொன்ன? என்றாள் கண்மணி.
“நோ!”ன்னு சொல்லிட்டு விறுவிறுன்னு கிளாஸ் பக்கம் ஓடி வந்துட்டேன்.
“சரி! உன் முடிவை சொல்லிட்டேல!” ஒரு பிரச்னையும் இல்லை! ப்ரீயா விடு!”
“எவ்வளவு தைரியம் அவனுக்கு! மேம் கூப்பிடறாங்கன்னு பொய் சொல்லி கூப்பிட்டுப் போய் இப்படி சொல்றதுக்கு?”
“வீட்ல சொல்ல போறியா? இல்ல பர்ஸ்ட் இயர் டிபார்ட்மெண்ட்ல கம்ப்ளெய்ன் பண்ணி ஆக்சன் எதுவும் எடுக்க சொல்லப் போறியா?”
வேற வினையே வேணாம். அப்புறம் நீ ஒண்ணும் காலேஜ்ல போய் படிக்கவே வேணாம்னு சொல்லுவாங்க. ஏற்கனவே பல அட்வைஸ் கேட்டுட்டுத் தான் இந்த கோ-எட் காலேஜ்ல படிக்கணும்னு வந்திருக்கேன். இந்த விஷயத்தை வீட்டுல நானே சொல்லி ஒரு பிரச்சனையை ஆரம்பிக்க விரும்பல!”
ஹ்ம்ம்! அதுவும் சரி தான்!
எதுவும் பண்ணாமல் இதை அப்படியே விட்ற போறேன். அதான் அவனுக்கும் நல்லது. எனக்கும்